கோவாவில் நடைபெற்ற களரி போட்டி - உடுமலை மாணவர்கள் 4 பேர் வெண்கலம் வென்று சாதனை

தமிழகத்தில் களரி போட்டியில் ஏராளமான மாணவ, மாணவிகள் ஈடுபட ஆர்வமாக இருப்பதால் தமிழக அரசு ஊக்கப்படுத்த முன் வர வேண்டும் என்று தேசிய அளவிலான களரி போட்டில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்த மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியைச் சேர்ந்த களரிப்பயட்டு வீரர்கள் கோவாவில் நடைபெற்ற 37 ஆவது தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டனர்.

அக்டோபர் 25ஆம் தேதி முதல் நவம்பர் 8 ஆம் தேதி வரை 43 வகையான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. 10 ஆயிரத்துக்கு மேலான விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். களரி பயட்டு போட்டியில் 16 மாநிலங்களைச் சார்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் தமிழக அணி சார்பில் உடுமலை பகுதியை சேர்ந்த 8 வீரர்கள் கலந்து கொண்ட நிலையில் சுவடுகள் பிரிவு, உருமி வீசல், கெட்டுகேறி ஆகிய பிரிவுகளில் நான்கு வெண்கல பதங்கள் வென்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்துள்ளனர்.



இதன் மூலம் லண்டனில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் தமிழக அணி சார்பில் மாணவர்கள் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வெற்றி பெற்ற வீரர்களுக்கு லெப்டினேட் சுபாஷ் ரேணுகா தேவி அறக்கட்டளை சார் சார்பில் நிர்வாகிகள் செல்வராஜ், பால முருகன், கணேஷ் சந்திரன், சிவக்குமார் ஆகியோர் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்து மேலும் பல பதங்கங்கள் வெல்வதற்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

வெற்றி பெற்ற மாணவர்கள் கூறும் பொழுது. தமிழகத்தில் களரி போட்டியில் ஏராளமான மாணவ, மாணவிகள் ஈடுபட ஆர்வம் இருப்பதால் தமிழக அரசு ஊக்கப்படுத்த முன் வர வேண்டும். மேலும் தற்போது தேசிய அளவிலான களரி போட்டியில் வெண்கல பதக்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்து உள்ளோம். எனவே தமிழக முதல்வர் நேரில் அழைத்து பாராட்டு தெரிவிக்க வேண்டும் என தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...