எம்.எஸ்.எஸ் நிறுவனம் சேவை குறைபாடு - இழப்பீடு வழங்க கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு

ஓமலுாரை சேர்ந்த வாடிக்கையாளர் வைதேகி என்பவருக்கு 2022ம் ஆண்டு, பால் பொருள் எந்திரங்கள் தயாரிப்பு நிறுவனம் அனுப்பிய டயரி மெஷினை டெலிவரி செய்யாமல் எம்.எஸ்.எஸ் நிறுவனம் திருப்பி அனுப்பியது கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையம் நடத்திய விசாரணையில் உறுதியாகியுள்ளது.


கோவை: பார்சல் சர்வீஸ் நிறுவனம் சேவை குறைபாடு செய்ததால், இழப்பீடு வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது. கோவை, ஆவாரம்பாளையம் ரோட்டில், ராஜசேகர் என்பவர் பால் பொருள் எந்திரங்கள் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார்.

சேலம் ஓமலுாரை சேர்ந்த வாடிக்கையாளர் வைதேகி என்பவருக்கு, 2022, செப். 1ல், 10,030 ரூபாய் மதிப்புள்ள, டயரி மெஷின் ஒன்றை, எம்.எஸ்.எஸ். என்ற பார்சல் சர்வீஸ் வாயிலாக, அனுப்பி வைத்தார். ஆனால், வாடிக்கையாளருக்கு டயரி மெஷின் டெலிவரி செய்யப்படாமல் திரும்பி வந்தது.

இது பற்றி கேட்ட போது, 'முகவரியில் ஆள் இல்லை' என்று கூறினர். ஆனால், குறிப்பிட்ட முகவரிக்கு, பார்சலை கொண்டு செல்லாமல், வேறு முகவரிக்கு எடுத்துச் சென்றது தெரியவந்தது.

இதனால் இழப்பீடு வழங்க கோரி, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில், ராஜசேகர் வழக்கு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல், 'மனுதாரர் அனுப்பிய முகவரிக்கு, பார்சலை எடுத்து செல்லாமல், எதிர்மனுதாரர் சேவை குறைபாடு செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, மனுதாருக்கு மொத்தம் 25,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...