குண்டடம் அருகே கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்

மருத்துவ முகாமில் பசு, எருமை, மாடு, ஆடு, கோழி மற்றும் நாய்களுக்கு கோமாரி நோய் தடுப்பூசி, சினை பரிசோதனை, செயற்கை முறை கருவூட்டல், கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் நோய் தடுப்பூசி, நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி என 1124 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் குண்டடம் அருகே கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் கர்த்தர் தேவை ஊராட்சிக்குட்பட்டடிரைவில் நடைபெற்றது.

முகாமிற்கு குண்டடம் வட்டாரம் காளிபாளையம் கால்நடை மருத்துவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் சரண்யா சேகர், துணைத்தலைவர் சின்ன காளிமுத்து ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

முகாமில் சின்ன மோளரப்பட்டி கால்நடை உதவி மருத்துவர் பிரகாசம் தலைமையில் மருத்துவர்கள் கொண்ட குழு பசு, எருமை, மாடு, ஆடு, கோழி மற்றும் நாய்களுக்கு கோமாரி நோய் தடுப்பூசி, சினை பரிசோதனை, செயற்கை முறை கருவூட்டல், கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் நோய் தடுப்பூசி, நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி என 1124 கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர். மேலும் மழை மற்றும் பனி காலங்களில் கால்நடைகளுக்கு எவ்வாறு பாதுகாப்பு அளிப்பது என்பது குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...