ஆவாரம்பாளையத்தில் போலி பத்திரம் தயாரித்து நிலம் விற்பனை - 15 பேர் மீது வழக்கு

ரவிகுமார் என்பவர், 2016ம் ஆண்டு தனது தெரிந்த, 14 பேருடன் சேர்ந்து குமார் என்பவருக்கு சொந்தமான நிலத்திற்கு போலியாக பத்திரம் தயாரித்து, வேறு நபர்களுக்கு விற்றுள்ளார். நிலம் வாங்கிய நபர்கள் அங்கு சென்று செட் அமைத்து தங்கியுள்ளனர். இதுகுறித்து புகாரின்பேரின் ரவிக்குமார் உட்பட, 15 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


கோவை: போலி பத்திரம் தயாரித்து நிலத்தை விற்ற, 15 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். கோவை ஆவாரம்பாளையத்தை சேர்ந்தவர் குமார், 63, இவருக்கு அவிநாசி ரோட்டில் காலி இடம் உள்ளது.

அந்த இடத்தை ரவிகுமார் என்பவர், 2016ம் ஆண்டு தனது தெரிந்த, 14 பேருடன் சேர்ந்து போலியாக பத்திரம் தயாரித்து, வேறு நபர்களுக்கு விற்றுள்ளார். நிலம் வாங்கிய நபர்கள் அங்கு சென்று செட் அமைத்து தங்கியுள்ளனர். இதை அறிந்த குமார், தன்னுடைய நிலத்தில் இருந்து வெளியேறும் படி கூறியுள்ளார்.

ஆனால் அவர்கள் குமாரை மிரட்டி அனுப்பினர். இடத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் காலி செய்யாததால், குமார் பீளமேடு போலீசில் புகார் அளித்தார். போலீசார் ரவிக்குமார் உட்பட, 15 பேர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...