கள்ளக்கிணறு கொலை வழக்கு - குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய காவல்துறை

மது அருந்தியதை தட்டிகேட்டவர்களை கொலை செய்த வழக்கில் 800 பக்கம் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டன. கொலை குற்றவாளிகளை நவம்பர் 22 ஆம் தேதி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ள கிணறு கொலை வழக்கு தொடர்பான குற்றவாளிகளை நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர்ப்படுத்தினர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்கிணறு கிராமத்தில் வசித்து வந்த செந்தில்குமார்,மோகன்ராஜ், ரத்தினம்மாள் மற்றும் புஷ்பவதி ஆகியோர் தனது வீட்டின் அருகே மது அருந்திய நபர்களை தட்டிக் கேட்டதற்காக வெட்டி கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் போலீசார் செல்லமுத்து, ஐயப்பன், குட்டி என்கின்ற வெங்கடேஷ், சோனை முத்தையா மற்றும் செல்வம் ஆகிய ஐந்து பேரை கைது செய்து குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.



இதில் விசாரணையின் போது தப்பிக்க முயன்றதாக குட்டி என்கின்ற வெங்கடேஷ் என்பவனை போலீசார் கால் முட்டியில் சுட்டு பிடித்தனர்.

குட்டி என்கின்ற வெங்கடேஷ் கோவையில் அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்போடு சிகிச்சையில் இருந்து வந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த காவல்துறையினர் 800 பக்கத்திற்கு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். இந்நிலையில் இன்று பல்லடம் குற்றவியல் நீதிமன்றத்தில் கலக்கிணறு கொலை குற்றவாளிகள் ஐந்து பேரையும் காவல்துறையினர் நீதிபதி முன்பு ஆஜர் படுத்தினர். குற்றவாளிகள் ஐந்து பேரையும் வரும் நவம்பர் 22 ஆம் தேதி திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டும் என நீதிபதி சித்ரா உத்தரவிட்டுள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...