கோவையில் மாட்டு வண்டியில் பயணம் செய்த புதுமண தம்பதிகள் - சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்

கோவை செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த ஆனந்த் என்பவருக்கும், பௌதாரணி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த புதுமண தம்பதிகள் மாட்டு வண்டியில் சென்றதை சாலையில் வாகனங்களில் சென்றவர்கள் ஆச்சரியமாக பார்த்தனர்.


கோவை: கோவையில் இன்று திருமணத்திற்கு பின்னர் புதுமண தம்பதிகள் மாட்டு வண்டியில் பயணம் செய்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

முகூர்த்த நாள் என்பதால் கோவை ஈச்சனாரி கோவிலில் நேற்று பல திருமணங்கள் நடைபெற்றது. இதில் கோவை செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த ஆனந்த் என்பவருக்கும், பௌதாரணி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.

இதனையடுத்து புதுமண தம்பதிகள் மாட்டு வண்டியில் செட்டிபாளையத்தில் உள்ள ஆனந்த் வீட்டுக்கு, ஈச்சனாரி கோவிலில் இருந்து மாட்டுவண்டியில் சென்றனர். மாட்டு வண்டியில் சென்ற புது மண தம்பதியினரை, சாலையில் வாகனங்களில் சென்றவர்கள் ஆச்சரியமாக பார்த்தனர். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...