தென்னை, வாழை பயிர்களை சேதப்படுத்திய காட்டுப்பன்றிகள் - இழப்பீடு வழங்க உடுமலை விவசாயிகள் கோரிக்கை

விளைநிலங்களில் தொடர்ந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வரும் காட்டு பன்றிகளை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: உடுமலை அருகே தென்னை மற்றும் வாழைப் பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்திய நிலையில் உரிய இழப்பீடு வழங்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள குடிமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் தற்சமயம் மக்காச்சோளம் தென்னை வாழை உள்ளிட்டு பல்வேறு பயிர்கள் அதிக அளவு சாகுபடி செய்துள்ளனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களாகவே இப்பகுதியில் இரவு நேரங்களில் காட்டுப் பன்றிகள் நடமாட்டம் அதிகளவு காணப்படுகின்றது.



மேலும் கூட்டம் கூட்டமாக வரும் காட்டு பன்றிகள் தென்னங்கன்று வாழை தோட்டங்களில் புகுந்து பலத்த சேதத்தை ஏற்படுத்தி உள்ளது இதனால் விவசாயிகளுக்கு பல லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளதால் சம்பந்தப்பட்ட வேளாண் துறையினர் கலாய்வு செய்து இழப்பீடு வழங்க வேண்டும் மற்றும் காட்டுப்பன்றி நடமாட்டம் குறித்து சம்பந்தப்பட்ட வனத்துறையினருக்கு காட்டுப் பன்றிகளை விரட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருவதால் வனத்துறையை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட விவசாயிகள் தற்பொழுது முடிவெடுத்துள்ளார்கள்.



எனவே விளைநிலங்களை தொடர்ந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வரும் காட்டு பன்றிகளை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...