தென் மாவட்டங்களில் தொடரும் படுகொலை - தமிழக அரசைக் கண்டித்து கோவையில் ஆர்ப்பாட்டம்

தனிப்பட்ட சாதியினர் தொடர்ந்து தேவேந்திர குல வெள்ளாளர் மக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துவதாகவும், தமிழக அரசும் காவல்துறையினரும் கொலைகளை தடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.


கோவை: தென் மாவட்டங்களில் தொடரும் படுகொலை நடைபெறும் நிலையில் தமிழக அரசை கண்டித்து தமிழ் மக்கள் முன்னேற்ற கழகத்தினர் கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



தென் மாவட்டங்களில் தொடரும் படுகொலை கண்டித்து தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக தமிழகம் முழுவதும் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் சார்பாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் 40-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தென் மாவட்டங்களில் தொடர்ந்து குறிப்பாக ஒரு சமூகத்தினரை படுகொலை செய்து வருகின்றனர். தென் மாவட்டங்களில் மட்டும் இல்லாமல் பிற மாவட்டங்களிலும் தொடர்ந்து படுகொலை திமுக ஆட்சியில் அரங்கேறி வருவதாக குற்றம் சாட்டினர்.



தனிப்பட்ட சாதியினர் தொடர்ந்து தேவேந்திர குல வெள்ளாளர் மக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துகின்றனர். தமிழக அரசும் காவல்துறையினரும் கொலைகளை தடுத்து எவ்வாறு கொலைகள் நடக்கிறது என்று ஆராய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...