மடத்துக்குளம் அருகே பணம் கொடுக்கல் வாங்கலில் பிரச்னை - ஒருவருக்கு அரிவாள் வெட்டு

மணி தான் வைத்திருந்த அருவாளை எடுத்து நாகராஜின் பின் கழுத்தில் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். தப்பியோடிய மணி என்பவரை கைது செய்து சிறையில் போலிசார் அடைத்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கணியூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட கணியூர் நல்லா போயன் தெருவில் வசித்து வருபவர் ஆறுமுகன் மகன் நாகராஜ்(39) இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் கட்டிடம் கட்டும் வேலை செய்து வருகிறார். இவருடன் கட்டிட வேலை செய்துவரும் திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டம் மிடாப்படியே சேர்ந்த கருப்பு சாமியின் மகன் மணி (43) என்பவர் நாகராஜனுக்கு சில மாதங்களுக்கு முன்பு பணம் கொடுத்துள்ளார்.

இந்தப் பணம் திரும்ப கேட்கும் பொழுது இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் மாலை மணி என்பவர் நாகராஜ் வீட்டிற்கு வந்து பணத்தை திருப்பி கேட்ட பொழுது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மணி தான் வைத்திருந்த அருவாளை எடுத்து நாகராஜின் பின் கழுத்தில் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பின்பு அருகில் இருந்தவர்கள் வெட்டுப்பட்ட நாகராஜை மீட்டு மடத்துக்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை செய்யப்பட்டு மேல் சிகிச்சைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.



இது சம்பந்தமாக கணியூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து மேற்கண்ட மணி என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...