வால்பாறை அருகே விபத்தில் சிக்கிய பேருந்து - அதிர்ஷ்டவசமாக பயணிகள் தப்பினர்

பேருந்தில் டீசல் டியூப் கட்டானதால் பிரேக் பிடிக்காமல் பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்பை உடைத்து தேயிலை தோட்டத்தில் கவிழ்ந்ததாக தெரிகிறது. இந்த விபத்து குறித்து வால்பாறை காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.


கோவை: வால்பாறை அருகே நல்லகாத்து எஸ்டேட் சாலையில் வெள்ளமலை எஸ்டேட்டில் இருந்து வந்த பேருந்து, ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து தேயிலைத் தோட்டத்தில் கவிழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் தப்பினர்.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் 34 அரசு பேருந்து உள்ளது வால்பாறையிலிருந்து பல்வேறு எஸ்டேட் பகுதிகளுக்கு பேருந்து சென்று வருகிறது. இந்நிலையில் வால்பாறை அருகே உள்ள வெள்ளமலை எஸ்டேட் பகுதிக்கு பேருந்து ஒன்று சென்று வந்தது.

இந்த பேருந்தை ஓட்டுநர் வெங்கடேஷ்குமார் மற்றும் நடத்துநர் பாலு ஆகியோர் இயக்கி வந்தனர். பேருந்தில் 11 பயணிகள் வால்பாறைக்கு பயணித்து உள்ளனர்.



சுமார் 3 மணி அளவில் வால்பாறை அருகே நல்லகாத்து எஸ்டேட் சாலையில் வரும் பொழுது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையின் தடுப்பு சுவரை உடைத்து தேயிலை தோட்டத்தில் கவிழ்ந்தது. பேருந்தில் பயணம் செய்த 11 பேர்களும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.



பேருந்தில் டீசல் டியூப் கட்டானதால் பிரேக் பிடிக்காமல் பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்பை உடைத்து தேயிலை தோட்டத்தில் கவிழ்ந்ததாக தெரிகிறது. இந்த விபத்து குறித்து வால்பாறை காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...