தி.மு.க. இளைஞரணி மாநாடு - மூலனூர் வந்த வாகன பிரசார பேரணிக்கு அமைச்சர் வரவேற்பு

மாநாட்டின் முழக்கத்தை, தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெங்கும் சேர்க்கின்ற விதமாக, 188 இருசக்கர வாகனப்பேரணி கன்னியாகுமரியில் தொடங்கியது. தற்போது அந்த வாகனம் முலனூர் வந்தது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மூலனூர் வந்தடைந்த திமுக இளைஞரணி மாநாட்டிற்கான வாகன பிரச்சார பேரணியை அமைச்சர் வரவேற்றார்.

தமிழ்நாடு முதல்-அமைச்சரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலோடு, மாநில உரிமை மீட்புக்கான தி.மு.க. இளைஞர் அணியின் 2-வது மாநில மாநாடு சேலத்தில் அடுத்த மாதம் (டிசம்பர்) 17 -ந் தேதி நடைபெறவுள்ளது.

இந்த முக்கியத்துவமிக்க மாநாட்டின் முழக்கத்தை, தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெங்கும் சேர்க்கின்ற விதமாக, 188 இருசக்கர வாகனப்பேரணி கன்னியாகுமரியில் தொடங்கியது.

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை எதிரே தி.மு.க. இளைஞர் அணி செயலாளர், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேரணியை தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து பெரியார் மண்டலத்தில் திருப்பூர் தெற்கு மாவட்டம் தாராபுரம் தொகுதிக்குட்பட்ட மூலனூர் பேரூராட்சி மூலனூர் வருகை தந்த வாகன பேரணியை தமிழ்நாடு தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் மாவட்ட தி.மு.க செயலாளராகிய இல.பத்மநாபன் வரவேற்றனர்.



இதில் மாநில, மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர , பேரூர் கழக செயலாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...