உடுமலை அருகே இராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் மருத்துவ குழுவினர் பரிசோதனை

மழைக்காலங்களில் தண்ணீரை காட்சி குடிக்க வேண்டும், சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும், கொசுக்கள் தேங்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்பன போன்ற அறிவுரைகள் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ குழுவினர் வழங்கினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியம் இராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ஆர். பி. எஸ். கே மருத்துவ குழுவினர் வருகை தந்து பள்ளி மாணவர்களின் உடல் நலம் குறித்து கேட்டறிந்து மருத்துவ பரிசோதனை செய்தனர்.

தற்போது மழைக்காலம் முடிவடைந்து, காலநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து தொடக்க பள்ளிகளில் உள்ள மாணவர்களின் உடல் நலனை பரிசோதிக்கும் விதமாக ஆர்பிஎஸ்கே மருத்துவ குழுவினர் ஒவ்வொரு பள்ளியிலும் சென்று மாணவர்களின் உடல் நலனை பரிசோதித்து வருகின்றனர்.



அதன் அடிப்படையில் இன்று இராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில், பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. அப்போது மழைக்காலங்களில் தண்ணீரை காட்சி குடிக்க வேண்டும். சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். கொசுக்கள் தேங்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்பன போன்ற அறிவுரைகள் மருத்துவ குழுவினரால் வழங்கப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் சாவித்திரி ஆசிரியர் கண்ணபிரான் ஆகியோர் பருவ கால முன்னெச்சரிக்கைகள் பற்றி மாணவர்களிடம் எடுத்துக் கூறினர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...