உடுமலையில் பருவநிலை மாற்றம் சார்ந்த பயிற்சி - பெண் தொழில் முனைவோர் பங்கேற்பு

வணிக திட்டம் தயாரித்தல், செலவு மற்றும் விலை, உற்பத்தியை திட்டமிடுதல், சந்தை மற்றும் சந்தைப்படுத்துதல் நடைமுறை சார்ந்த பயிற்சி 3 நாட்கள் நடைபெற உள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் பருவநிலை மாற்றம் சார்ந்த பெண் தொழிற் முனைவோருக்கு பயிற்சி முகாம் தொடங்கப்பட்டுள்ளது.

உடுமலை அடுத்த போடிபட்டி ஊராட்சியில் பருவநிலை மாற்றம் சார்ந்த பெண் தொழில் முனைவோருக்கான பயிற்சி நடைபெற்று வருகிறது. பயிற்சியை போடிபட்டி ஊராட்சி மன்றத் தலைவர் சௌந்தரராஜன் தலைமையேற்று தொடங்கி வைத்தார்.

திருப்பூர் மகளிர் திட்டம் பாஸ்கர் முன்னிலை வகித்தார். மகளிர் கல்வி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தாராபுரம் இயக்குனர் குணசீலி வரவேற்புரை ஆற்றினார். இந்த பயிற்சியானது 3 நாட்கள் நடைபெற உள்ளது. முதல் நாள் நிகழ்வாக தொழில் முனைவோரின் திறன்கள், சந்தை ஆராய்ச்சி, ஒரு நிறுவனத்தின் சாத்தியம் உள்ளிட்ட பயிற்சி நடைபெற்றது. 2-வது நிகழ்வாக 23-ம் தேதி வியாழக்கிழமை வணிக திட்டம் தயாரித்தல், செலவு மற்றும் விலை, உற்பத்தியை திட்டமிடுதல், சந்தை மற்றும் சந்தைப்படுத்துதல் நடைமுறை சார்ந்த பயிற்சி நடைபெற உள்ளது.

3-வது நிகழ்வாக 25-ம் தேதி சனிக்கிழமை விளம்பரம் மற்றும் சந்தைப்படுத்துதல் திட்டம், பணி மூலதன மேலாண்மை, பணப்புழக்கம், வணிக கணக்குகளை வைத்திருத்தல் தொடர்பான பயிற்சி நடைபெற உள்ளது. நிகழ்ச்சியின் முடிவில் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் தாராபுரம் ஐஸ்வர்யா நன்றி உரை கூறினார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...