ஆழியார் அணையில் இருந்து பழைய ஆயகட்டு பாசன பகுதிகளுக்கு தண்ணீர் வழங்க கோரி விவசாயிகள் போராட்டம்

பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பழைய ஆயக்கட்டு விவசாயிகளுக்கு தண்ணீர் வழங்க உறுதியளித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்வோம் என விவசாயிகள் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டதால் நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் பரபரப்பு நிலவுகிறது.


கோவை: பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தின் கீழ் உள்ள ஆழியார் அணையில் இருந்து புதிய ஆயக்கட்டில் 44 ஆயிரம் ஏக்கர் மற்றும் பழைய ஆயக்கட்டில் 6400 ஏக்கர் பாசன வசதி பெறுகின்றன.

இதில் பழைய ஆயக்கட்டில் நெல் சாகுபடி அதிக அளவில் பயிரிடப்பட்டு வருகின்றனர். இந்த நெல் சாகுபடிக்கு ஆழியார் அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு பாசன பகுதிக்கு தண்ணீர் வழங்க வேண்டும் என்றும், குறிப்பாக அரியபுரம், பெரியஅணை, பள்ளி விழங்கால் மற்றும் வடக்களூர் அம்மன் உள்ளிட்ட ஐந்து கால்வாய்களின் மூலம் அணையில் இருந்து தண்ணீர் சென்று பாசனப்பகுதிகளை சேர்கின்றன எனவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

தற்போது பழைய ஆயக்கட்டு பகுதிகளில் இரண்டாம் போக நெல் சாகுபடிக்கு விவசாயிகள் தயாராகி நெல் நடவு செய்துள்ளனர். தற்போது நெல் நாற்றுகள் முளைத்து வரும் நிலையில் ஆழியாறு பழைய ஆயக்கட்டு விவசாய பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு தண்ணீர் தர மறுப்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.



அண்டை மாநிலமான கேரள மாநிலத்துக்கு தண்ணீர் தருவதை போல், எங்களுக்கும் தண்ணீர் தர வேண்டும் என கூறி ஆழியாறு நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



அதிகாரிகள் யாரும் அலுவலகத்திற்கு வராத நிலையில் அதிகாரிகளை கண்டித்தும், தண்ணீர் வழங்காததைக் கண்டித்தும், அவர்கள் கண்டன கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஆழியார் காவல் நிலைய போலீசார், விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி அதிகாரிகளிடம் கூறி உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என கூறினர்.

ஆனால் விவசாயிகள் இங்கிருந்து கலைந்து செல்ல மட்டோம் எனக்கூறி நீர்வள அலுவலகத்திற்கு முன்பு அமர்ந்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பழைய ஆயக்கட்டு விவசாயிகளுக்கு தண்ணீர் வழங்க உறுதியளித்தால் மட்டுமே கலைந்து செல்வம் என கூறி காத்திருப்பு போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...