உடுமலை அருகே மலைவாழ் குடியிருப்புகளை பராமரிக்க வலியுறுத்தல்

ஆண்டியகவுண்டனூர் பகுதியில் மலைவாழ் மக்களுக்காக கட்டப்பட்ட வீடுகளின் தரத்தை மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்ய வேண்டும். அங்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து மலைவாழ் மக்களை குடி அமர்த்துவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: உடுமலை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்தின் அடர்ந்த வனப்பகுதி மற்றும் அடிவாரப் பகுதியில் மலைவாழ் மக்கள் குடியிருந்து வரக்கூடிய குடியிருப்புகள் உள்ளது. இதில் ஆண்டிய கவுண்டனூர் ஊராட்சிக்கு உட்பட்ட மேற்கு திப்பி பாறை குடியிருப்பும் அடங்கும்.

இங்குள்ள மலைவாழ் மக்கள் பிளாஸ்டிக் காகிதங்களால் வேயப்பட்ட குடில்களில் குடியிருந்து வருகின்றனர். இதனால் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதுடன் இயற்கை சீற்றத்தால் அவதிக்கு உள்ளாவதும் தொடர் கதையாக இருந்து வந்தது. அதைத் தொடர்ந்து மலைவாழ் மக்கள் பயன்பெறும் வகையில் கடந்த 2020-21 ம் ஆண்டில் சாயப்பட்டறை அருகே உள்ள தம்புரான் நகரில் தலா 3 லட்சம் மதிப்பீட்டில் சூரிய சக்தி மின் வசதியுடன் கூடிய 4 ரெடிமேடு வீடுகளுடன் 22 வீடுகள் கட்டப்பட்டது.

இந்த வீடுகளில் தற்போது மலைவாழ் மக்களின் 6 குடும்பங்கள் மட்டுமே வசித்து வருகின்றனர். மற்ற குடும்பங்கள் மேற்கு திப்பி பாறை பகுதியிலேயே இன்றளவும் வசித்து வருகின்றனர். இயற்கையோடு இணைந்த வாழ்வியல் முறையை ஆதாரமாகக் கொண்டதால் மலைவாழ் மக்களால் இடம்பெயற முடியவில்லை. மேலும் அவர்களின் வாழ்வாதாரமான ஆடு,மாடு மேய்த்தல், இயற்கையாக விளையும் பொருட்களை சேகரித்து விற்பனை செய்தல் உள்ளிட்டவை புதிதாக வீடுகள் கட்டப்பட்ட பகுதியில் இல்லாததும் காரணமாகும்.



அத்துடன் அங்கு கட்டப்பட்டுள்ள வீடுகளும் தரம் குறைந்தே காணப்படுகிறது. மழை பெய்யும் போது தண்ணீர் வழிந்து செல்லாமல் வீடுகளின் மேற்கூறையில் தேங்கி நிற்கிறது. இதனால் மேற்கூரையும் சேதம் அடைந்து அவை கட்டப்பட்டதற்கான நோக்கமும் கிட்டத்தட்ட 66 லட்சம் ரூபாயும் வீணாகி வருகிறது. அத்துடன் சூரிய சக்தி மின் விளக்குகளும் வீடுகளில் அமைக்கப்படவில்லை.

குடிநீர், தெரு விளக்கு, சுகாதார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் அங்கு செய்து தரப்படவில்லை. இதனால் தற்போது அங்குள்ள மலைவாழ் மக்களே அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். இதனால் அச்சமடைந்த மலைவாழ் மக்கள் அங்கு குடியேறுவதில் தொடர்ந்து தயக்கம் காட்டி வருகின்றனர். இதன் காரணமாக அங்கு கட்டப்பட்ட வீடுகள் பராமரிப்பு இல்லாமல் புதர் சூழ்ந்து சேதம் அடைந்து வருகிறது.

எனவே மாவட்ட நிர்வாகம் ஆண்டியகவுண்டனூர் பகுதியில் நேரடியாக ஆய்வு செய்து மலைவாழ் மக்களுக்காக கட்டப்பட்ட வீடுகளின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும். அத்துடன் அங்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து மலைவாழ் மக்களை குடி அமர்த்துவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...