உடுமலை நகராட்சி பகுதியில் புகையிலை பொருட்கள் குறித்து விழிப்புணர்வு

பஸ் நிலைய பகுதியில் உள்ள கடைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது விதிகளை மீறி விற்பனை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து, கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பஸ் நிலைய பகுதி கடைகளில் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் சார்பாக அதிகாரிகள் தரப்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

உடுமலை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ஆனந்த் குமார் உத்தரவின் பேரில் பொது சுகாதாரத்துறை, காவல்துறை இணைந்து புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பான ஆய்வு மேற்கொண்டனர்.

மாவட்ட நல கல்வியாளர் ராஜ்குமார், புகையிலை சமூக சேவகர் பிரவீன் குமார், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சோனை, சுகாதார ஆய்வாளர்கள் சஞ்சய், தினேஷ் மற்றும் ஜெயபால், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் ஆகியோர் கொண்ட குழு பஸ் நிலைய பகுதியில் உள்ள கடைகளில் ஆய்வு செய்தனர்.

அப்போது விதிகளை மீறி விற்பனை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அபராதம் விதிக்கப்பட்டது. அத்துடன் கடை உரிமையாளருக்கும் பொதுமக்களுக்கும் புகையிலை தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...