ஆத்துப்பாலம் அருகே நொய்யல் ஆறு ஆக்கிரமிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து வருவாய் ஆய்வாளர் ஆய்வு

கோவை, திருப்பூர் மாவட்டங்களின் உயிர் நாடியாக விளங்கும் நொய்யல் ஆறு மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகி, சின்னாறு, பெரியாறு என பல கிளை ஆறுகளும், சிற்றாறுகளும் கூடுதுறையில் சங்கமமாகி, நொய்யல் உருவெடுக்கிறது.

ஒரு காலத்தில், கொங்கு மண்டலத்தில் உயிர்களுக்கும், பயிர்களுக்கும் ரத்தநாளமாய் விளங்கிய நொய்யல், கடந்த கால் நுாற்றாண்டு காலத்தில், ஆக்கிரமிப்புகளாலும், ஆலைக்கழிவுகளாலும் இருந்த தடமே மறைந்துபோய் கொண்டிருக்கிறது.

நொய்யலின் வழித்தடத்தை மறித்தும், குளங்களை மூடியும் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகள், நொய்யலின் மறைவிற்கு முக்கியப் பங்காற்றுகின்றன.

இந்த விஷயத்தில், அரசுத்துறைகளே முன்னோடியாக விளங்கி, சாலை, பணிமனை என ஏராளமான கட்டமைப்புகளை குளத்தில் அமைத்துள்ளன. அதன் தொடர்ச்சியாக, குளங்களை பல்லாயிரக்கணக்கானோர் ஆக்கிரமித்து, வீடுகளைக் கட்டியுள்ளனர்.

இதனிடையே, ஆப்துப்பாலம் அருகே, கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 86-வது வார்டு பூங்காநகர் பகுதியில் நொய்யல் நதியில் அத்துமீறி ஆக்கிரமிப்புபணி நடைபெற்று வருவதாக புகார்கள் எழுந்தன.



இதனைத்தொடர்ந்து இன்று ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் வடக்கு வருவாய் ஆய்வாளர் உமாபாரதி தலைமையிலான அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் சகாபுதீன் என்பவருக்கு சொந்தமான இரும்புக்குடோன் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. அக்குடோன் கட்டப்பட்டு வரும் பகுதியை வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, அந்நிலத்தினை சகாபுதீன் முறையாக வாங்கியுள்ளாரா அல்லது ஏதேனும் முறைகேடு நடைபெற்றுள்ளதா என்பதை விசாரிக்க அந்நிலத்தின் பட்டா உள்ளிட்ட ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி சென்றுள்ளனர்.



இந்த ஆவணங்கள் மாநகராட்சி நில அளவையர்களின் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு பின்பே நொய்யல் ஆற்றின் பகுதி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.



இதுகுறித்து ஓசை சுற்றுச்சூழல் அமைப்பின் சையது நமது நிருபரிடம் கூறுகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சகாபுதீன் என்பவர் ஆத்துப்பாலம் அருகே உள்ள பூங்காநகரில் நொய்யல் ஆற்றின் கரையோரம் நிலத்தினை ஆக்கிரமித்து தற்போது இரும்பு குடோன் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இதுகுறித்து சகாபுதீனிடம் தொடர்புகொண்டு கேட்டபொழுது அவர் இந்நிலத்திற்கான அனைத்து ஆவணங்களும் என்னிடம் உள்ளதாகவும், அந்நிலத்திற்கு அவர் பட்டா பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார். 

நொய்யல் ஆறு பாதுகாப்பு சட்டவிதிகளின் படி அந்த ஆற்றுப்படுகையில் இருந்து ஐந்து மீட்டர் தூரம் வரை மாநகராட்சி வசமே இருக்க வேண்டும். ஆனால், தற்போது சகாபுதீன் நொய்யல் ஆற்றங்கரையை ஒட்டியே கட்டிடம் கட்டி வருகிறார். இதற்கு எவ்வாறு மாநகராட்சி நிர்வாகம் ஒப்புதல் அளித்திருக்கும் என்பதில் சந்தேகம் எழுகிறது. 



அந்த ஆவணங்களை காண நான் கேட்டதற்கும், அரசு தரப்பில்இருந்து கேட்டால் மட்டுமே காண்பிக்க முடியும் என்றும், வேறு யாரிடமும் அதனை காண்பிக்க முடியாது என்றும் அவர் கூறுவது மேலும் சந்தேகத்தை வழுப்படுத்துகிறது.

தற்போது, நொய்யல் ஆற்றில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை மட்டும் மாவட்ட நிர்வாகம் மீட்டுக்கொடுத்தால் போதும். எங்களது குழுவினரும், பூங்கா நகர் பகுதி மக்களும் இணைந்து அதனை தூர்வார தயாராக உள்ளோம்.



மேலும், இதுகுறித்து கோவை மாநகராட்சி ஆணையர் க.விஜயகார்த்திகேயன் கவணத்திற்கு எடுத்துச்செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. நொய்யலின் ஆக்கிமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும்" என ஓசை சையது கூறினார்.



Newsletter

கோவையில் இன்று (21.05.2026) மாதாந்திர மின் பராமரிப்பு:  பல பகுதிகளில் மின் நிறுத்தம்

கோவை நகரில் மே 21, 2026 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஐந்து துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும...

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...