கோவையில் மேலும் இருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி - 11 பேர் வீட்டில் சிகிச்சை

ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட பரிசோதனையில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. தற்போது 11 போ் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.


கோவை: கோவையில் கடந்த சில நாள்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடா்ந்து உயா்ந்து வருகிறது. அதன்படி, வெள்ளிக்கிழமை ஒருவருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், சனிக்கிழமை 3 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.

இதைத் தொடா்ந்து, மேலும் இருவருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்து 43 ஆயிரத்து 176 ஆக உள்ளது. இதுவரை 3 லட்சத்து 40 ஆயிரத்து 545 போ் குணமடைந்துள்ளனர். தற்போது 11 போ் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையில் உள்ளனா்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...