குண்டடம் அருகே மக்காச்சோள பயிரை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகள் - விவசாயிகள் வேதனை

ஒட்டபாளையம், கள்ளிவலசு, மருதூர், பெல்லம்பட்டி, நவநாரி, பெரியகுமாரபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மக்காச்சோள பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தியுள்ளதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.


திருப்பூர்: திருப்பூா் மாவட்டம் குண்டடம் பகுதியில் ஆவணி, புரட்டாசி பட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் மக்காச்சோளம் சாகுபடி செய்துள்ளனர். தற்போது அவை கதிர்விட்டு பால்புடை பருவத்தில் உள்ளது.

அடுத்த ஒரு மாதத்தில் அறுவடைக்கு வந்துவிடும். இந்த நிலையில் குண்டடம் அருகே உப்பாறு அணை மற்றும் உப்பாறு ஓடை பகுதிகளான ஒட்டபாளையம், கள்ளிவலசு, மருதூர், பெல்லம்பட்டி, நவநாரி, பெரியகுமாரபாளையம், கள்ளிப்பாளையம், முத்தூர் உள்ளிட்ட கிராமங்களில் மக்காச்சோள வயல்களில் காட்டுப்பன்றிகள் புகுந்து துவம்சம் செய்து வருகின்றன.

குறிப்பாக இரவு நேரங்களில் வயல்களில் புகும் காட்டுப்பன்றிகள் மக்காச்சோள தட்டுகளை கீழே தள்ளி கதிர்களை சாப்பிட்டு விடுகின்றன. தட்டுகள் கீழே சாய்ந்து அதன் மீது பன்றிகள் நடப்பதால் அந்த மக்காச்சோள தட்டுகள் மாடுகள் தின்பதற்கு கூட லாயக்கில்லாமல் போய்விடுகிறது. மகசூலும் கணிசமாக பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே இந்த பகுதிகளில் காட்டுப்பன்றிகள் தொல்லை செய்து வருவதால் மக்காச்சோள பயிர்கள் கதிர்விடும் தருணத்தில் வயலைச்சுற்றிலும் கம்பிகளைக்கட்டியும், ஆங்காங்கே சேலை, வேட்டிகள், வெள்ளைச்சாக்குகளை கட்டித்தொங்க விட்டுள்ளனர். இருப்பினும் பன்றிகள் வயல்களில் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது.

இதுபற்றி விவசாயிகள் கூறியதாவது, மழை சீசனுக்கு ஏற்ற பயிராக மக்காச்சோளம் உள்ளதால் வருடம்தோறும் இந்தசீசனில் மக்காச்சோளம் சாகுபடி செய்து வருகிறோம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே காட்டுப்பன்றிகளால் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறோம். இரவு நேரங்களில் அவ்வப்போது பட்டாசுகளை வெடித்தும், கம்பிகளை கட்டியும் முன்னெச்சரிக்கையாக இருந்தாலும் அடிக்கடி வயலுக்குள் வந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

கடந்த வருடம் இதுபோலவே காட்டுப்பன்றியால் பயிர்கள் சேதமான தகவலறிந்து வனத்துறையினர் நேரில் வந்து ஆய்வு செய்தனர். இழப்பீடு பெற்றுத்தரவும் நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.

ஆனாலும் இதுவரை எந்தவிதமான நிவாரணமும் கிடைக்கவில்லை. எங்களுக்கு நிவாரணத்தை விட காட்டுப்பன்றிகளை முழுமையாக பிடித்து அப்புறப்படுத்த வனத்துறை நடவடிக்கை மேற்கொண்டாலே போதும். இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் தொடரும் கொலை சம்பவங்கள்: ஆலாந்துறையில் பட்டப்பகலில் ஒருவர் வெட்டிக்கொலை

கோவை ஆலாந்துறையில் நாகராஜ் (60) என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அதே பகுதியைச் சேர்ந்த கந்தசாமி என்பவரை போ...

இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...