புத்தாண்டு விடுமுறையில் கோவை குற்றாலத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

புத்தாண்டு அன்று ஒரேநாளில் மட்டும் 327 குழந்தைகள் உட்பட 2,400க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் குடும்பம், குடும்பமாக அருவியில் குளித்து மகிழ்ந்தோடு, செல்போன்களில் படங்களையும் எடுத்துச் சென்றனர்.


கோவை: புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு கோவை குற்றாலத்திற்கு வந்த 2,400 க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.



கோவை சிறுவாணி சாலை சாடிவயல் பகுதியில் உள்ள கோவை குற்றாலத்திற்கு தமிழகம் மட்டுமல்லாமல், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.



இந்நிலையில் ஆங்கில புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு பல்வேறு பகுதியில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள், காலையிலிருந்தே நீண்ட வரிசையில் நின்று குற்றால அருவிக்கு செல்வதற்கான டிக்கெட்டுகளை பெற்றுக் கொண்டு, பின்னர் சுற்றுலா வாகனத்தில் ஏறி குற்றாலம் அருவிக்கு சென்றனர்.



அப்பகுதியில் உள்ள இயற்கை அழகை ரசித்த சுற்றுலாப் பயணிகள், பின்னர் குற்றாலம் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.



புத்தாண்டு விடுமுறை என்பதால் ஒரே நாளில் 327 குழந்தைகள் உட்பட 2,400க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் குடும்பம் குடும்பமாக அருவியில் குளித்து மகிழ்ந்தோடு, செல்போன்களில் படங்களையும் எடுத்துச் சென்றனர். அதிகளவு சுற்றுலா பயணிகள் வரத்து இருந்ததால் வனத்துறையினர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...