கோவை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் 'எப்போ வருவாரோ’ ஆன்மிகச் சொற்பொழிவு நிகழ்ச்சி

'எப்போ வருவாரோ’ ஆன்மிகச் சொற்பொழிவு நிகழ்ச்சியின் இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை மாலையில் வள்ளலார் குறித்து ஸ்ரீ கிருஷ்ண ஜகந்நாதன் உரையாற்றுகிறார்.


கோவை: கோவை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் ‘எப்போ வருவாரோ’ ஆன்மிகச் சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்தப்படும். அதன்படி 18-ஆம் ஆண்டு ஆன்மிகச் சொற்பொழிவு நிகழ்ச்சி, கிக்கானி மேல்நிலைப் பள்ளியில் உள்ள சரோஜினி நடராஜ் கலையரங்கில் திங்கள்கிழமை தொடங்கியது. வரும் 9 ஆம் தேதி வரை தினசரி மாலை 6.30 மணிக்கு நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு பேச்சாளா்கள் பங்கேற்கின்றனா்.

முதல் நாளான திங்கள்கிழமை அருளாளா் ஸ்ரீ பாம்பன் சுவாமிகள் என்ற தலைப்பில் பேச்சாளா் பாரதி பாஸ்கா் பங்கேற்றுப் பேசினார். முன்னதாக, ஆன்மிகத் தொண்டாற்றி வருபவா்களுக்கு ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் அருள் வளா்செம்மல் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், கோவை அரன் பணி அறக்கட்டளையின் தலைவா் அ.தியாகராசன், திருப்பூா் சுப்ரீம் குழும நிறுவனங்களின் நிறுவனா் எஸ்.ஏ.ராதாகிருஷ்ணன், திருப்பூா் எஸ்பிஎஸ் அன்னையா் இல்ல நிர்வாகிகள் எஸ்பிஎஸ் தாமோதரன், சாவித்திரி தாமோதரன், அன்னூா் ஸ்ரீராமானுஜா் பக்த பேரவையின் செயலா் ஏ.வி.திருமூா்த்தி, புன்செய் புளியம்பட்டி அண்ணாமலையார் திருக்கோயில் செயலா் வெங்கிட்டம்மாள் ஐங்கரன் ஆகியோருக்கு ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிர்வாக இயக்குநா் எம்.கிருஷ்ணன் அருள்வளா் செம்மல் விருது வழங்கி கௌரவித்தார்.



நிகழ்ச்சியில், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வா் டாக்டா் அ.நிர்மலா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். ‘எப்போ வருவாரோ’ ஆன்மிகச் சொற்பொழிவு நிகழ்ச்சியின் இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை (ஜனவரி 2) வள்ளலார் குறித்து ஸ்ரீ கிருஷ்ண ஜகந்நாதன் உரையாற்றுகிறார்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...