போலீசார் அழைத்துச் சென்ற வாலிபரின் நிலை என்ன? : கமிஷனர் அலுவலத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்


கோவை சாய்பாபா காலனியை சேர்ந்த ஜாபர் அலி என்பவரது மகன் அபுதாகிர். இவர் உக்கடம் பகுதியில் செருப்பு கடை நடத்தி வருகிறார். நேற்று மாலை இவரது கடைக்கு சென்ற சி.பி.சி.ஐ.டி போலீசார் அபுதாகிரை துப்பாக்கி முனையில் விசாரணைக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

இது குறித்து அபுதாகிர் வீட்டிற்கு போலீசார் தகவல் எதுவும் தராததால் பதற்றமடைந்த அவரது பெற்றோர் உக்கடம் காவல் நிலையத்திற்கு சென்று பார்த்தனர். அங்கு அபுதாகிர் இல்லை என்று போலீசார் பதிலளித்ததால் பதற்றமடைந்த அவர்கள் மேற்கொண்டு சி.பி.சி.ஐ.டி அலுவலகத்திற்கு சென்றனர். அங்கும் அபுதாகிர் இல்லாததால் மேலும் பதற்றமடைந்த அபுதாகிரின் பெற்றோர் மற்றும் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விசாரணைக்கு அழைத்துச் சென்ற வாலிபரின் நிலை என்ன? என்பது குறித்து கேள்வி எழுப்பினர்.



தொடர்ந்து அங்கு பணியில் இருந்த போலீசார், அபுதாகிர் குறித்த தகவல் இன்று மாலைக்குள் தெரிவிக்கப்படும் என்றனர். ஆனாலும் கூட்டத்தினர் கலைந்து செல்ல மறுத்தனர்.



தொடர்ந்து, அபுதாகிரின் பெற்றோர்கள் மட்டும் தற்போது காவல் ஆணையர் அலுவலகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம், அபுதாகிரிடம் விசாரணை முடிந்த பின்னர் அவரை பார்க்களாம் என்றும், மற்றவர்களை கலைந்து செல்லுமாறு சொல்லும்படியும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...

ஆனைகட்டி அருகே உக்ரைன் சுற்றுலா பயணியை விரட்டிய காட்டு யானை

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே ஒற்றை காட்டு யானை விரட்டியதால் உயிர் தப்பிக்க ஓடிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ப...

அவிநாசி தனித்தொகுதி தவெக MLA கமலி அமைச்சராக பதவியேற்பு

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனித்தொகுதி தமிழக வெற்றிக் கழக MLA கமலி, தவெக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கத்தில்...

கோவை மாவட்டத்தை சேர்ந்த 2 தவெக MLA-க்களுக்கு அமைச்சரவை பதவி..!

கோவை வடக்கு மற்றும் கிணத்துக்கடவு தொகுதிகளை சேர்ந்த தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பத்குமார், விக்னேஷ் குமார் ஆகியோருக்க...

கோவையில் இன்று (21.05.2026) மாதாந்திர மின் பராமரிப்பு:  பல பகுதிகளில் மின் நிறுத்தம்

கோவை நகரில் மே 21, 2026 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஐந்து துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும...