வால்பாறை அருகே தேயிலை தோட்டத்தில் குட்டியுடன் யானை தூங்கும் காட்சி வெளியீடு

தோணிமுடி எஸ்டேட் பகுதியில் சென்று உள்ள யானைகளை ட்ரோன் கேமரா மூலம் வனத்துறையினர் கண்காணித்து வந்துள்ளனர். அப்போது, தேயிலை தோட்ட பகுதியில் தாய் யானையும், குட்டி யானையும் அயர்ந்து உறங்கும் காட்சி கேமிராவில் பதிவாகியுள்ளது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. பல்வேறு எஸ்டேட் பகுதிகளில் யானைகள் தனியாகவும், கூட்டமாகவும் சுற்றி வருகிறது.



பகல் நேரத்தில் தேயிலை தோட்டத்தில் உலாவும் யானைகளை பார்க்க முடிகிறது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு பண்ணிமேடு எஸ்டேட் பகுதியில் 13 காட்டு யானைகள் குட்டியுடன் எஸ்டேட் பகுதியில் சுற்றி வந்தது. இதில் இரவு நேரத்தில் குட்டி யானை கூட்டத்திலிருந்து பிரிந்து சென்றது. அதை மானாம்பள்ளி வன சரகர் மணிகண்டன் தலைமையில் வனத்துறையினர் குட்டி யானையை தாயுடன் சேர்த்தனர்.

அந்த தாய் யானையையும் குட்டி யானையும் வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். இந்நிலையில் தோணிமுடி எஸ்டேட் பகுதியில் சென்று உள்ள யானைகளை ட்ரோன் கேமரா மூலம் கண்காணித்து உள்ளனர்.



தேயிலை தோட்ட பகுதியில் தாய் யானையும் குட்டி யானையும் அயர்ந்து உறங்கும் காட்சி பதிவு செய்து வனத்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

Newsletter

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...