பல்லடம் அருகே மாதப்பூர் அருள்மிகு முத்துக்குமாரசுவாமி திருக்கோவிலில் மண்டல பூஜை விழா

மண்டல பூஜை விழாவில் வேளராசி கலைக்குழுவினரின் வள்ளி கும்மியாட்டம் நடைபெற்றது. முருகப்பெருமான் வள்ளியை திருமணம் செய்த கதையினை பாடலாக பாடி ஒரே சீருடையில் பெண்கள் கும்மி நடனம் ஆடினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் மாதப்பூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு மரகதாம்பிகை உடனுறை மகிமாலீஸ்வரர் மற்றும் முத்துக்குமாரசுவாமி திருக்கோவிலில் திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற்று முடிந்த நிலையில் தற்போது மண்டல பூஜை நடைபெற்று வருகிறது.



19ஆம் நாளான இன்று ப.வடுகபாளையத்தை சேர்ந்த வைகோ பாலு-தனமணி குடும்பத்தார் மற்றும் லோகநாதன்- மாலதி குடும்பத்தாரின் ஏற்பாட்டில் மண்டல பூஜை விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.

மரகதாம்பிகை உடனுறை அருள்மிகு மகிமாலீஸ்வரர் மற்றும் முத்துக்குமாரசுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது.



ஆயிரக்கணக்கான பக்தர்கள் மண்டல பூஜையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.



விழாவின் தொடர்ச்சியாக வேளராசி கலைக்குழுவினரின் வள்ளி கும்மியாட்டம் நடைபெற்றது. முருகப்பெருமான் வள்ளியை திருமணம் செய்த கதையினை பாடலாக பாடி ஒரே சீருடையில் பெண்கள் கும்மி நடனம் ஆடினர்.



இதன் தொடர்ச்சியாக சாமி தரிசனம் செய்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...