டெங்கு, சிக்கன் குனியாவிற்கு விரைவில் தடுப்பூசி - பொள்ளாச்சியில் இம்யூனாலாஜிக்கல்ஸ் நிறுவன இயக்குனர் பேட்டி

இந்த காலகட்டத்தில் வனங்களை பாதுகாப்பது மிகவும் அவசியம். வனவிலங்குகள் வெளியில் வர தொடங்கியுள்ளது. இதனால் மிகப்பெரிய அளவில் நோய் பரவும் அபாயம் ஏற்படும் என்று இம்யூனாலாஜிக்கல்ஸ் நோய் தடுப்பு நிறுவனத்தின் இயக்குனர் ஆனந்த் குமார் தெரிவித்துள்ளார்.


கோவை: கெரோனோ காலகட்டத்தில் ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் இம்யூனாலாஜிக்கல்ஸ் நோய் தடுப்பு நிறுவனம் மத்திய அரசின் அனுமதி பெற்று கொரோனா தடுப்பூசி தயாரிக்கப்பட்டு உலகம் முழுவதும் 60% தடுப்பூசிகளை அனுப்பி கொரோனா நோய் தடுப்பில் பெரும் பங்காற்றியது.

இந்த நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் ஆனந்த் குமார் பொள்ளாச்சி அருகே உள்ள வேட்டைக்காரன்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர். இவருக்கு பெருமை சேர்க்கும் விதமாக பொள்ளாச்சி ரோட்டரி தன்னார்வ அமைப்பு மூலம் தொழில்சார் மேலாண்மை விருது வழங்கும் நிகழ்ச்சி பொள்ளாச்சியில் நேற்று நடைபெற்றது.



இந்தநிகழ்வில் ரோட்டரி தன்னார்வ அமைப்பு சார்பில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.



பின்னர் செய்தியாளர்களுக்கு ஆனந்த்குமார் அளித்த பேட்டியின் போது, உலகிலேயே அதிக அளவில் பல்வேறு நோய்களுக்கு தடுப்பூசி இந்தியாவில் தான் தயாரிக்கப்படுகிறது. இந்தாண்டு 3 தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் டெங்கு, சிக்கன் குனியா, ஜிக்கா மற்றும் விலங்குகளுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்றும், தற்போது பரவி வரும் புதிய வகை கொரோனாவால் எந்த பயமும் இல்லை என்றும் பாதிப்பும் இருக்காது என்றும் அவர் கூறினார்.

உலகிலேயே 60% தடுப்பூசிகள் இந்தியாவில் தான் தயாரிக்கப்படுகிறது. மேலும் குறைந்த விலையில் வழங்கப்படுகிறது. வரும் காலத்தில் எந்த வகையான வைரஸ் தாக்கினாலும் இந்தியாவில் தடுப்பூசி தயாரிக்க முடியும். மேலும் இந்த காலகட்டத்தில் வனங்களை பாதுகாப்பது மிகவும் அவசியம். வனவிலங்குகள் வெளியில் வர தொடங்கியுள்ளது. இதனால் மிகப்பெரிய அளவில் நோய் பரவும் அபாயம் ஏற்படும் என்று தெரிவித்தார்.

Newsletter

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...