முதல்வர் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில் குளறுபடி - பொள்ளாச்சி ஒன்றிய கூட்டத்தில் புகார்

கிராமப்புறங்களில் பல்வேறு பகுதிகளில் தார் சாலைகள் பழுதடைந்து காணப்படுவதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சாலைகளை செப்பணிட வேண்டும் என்று பெரும்பாலான ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் கோரிக்கை விடுத்தனர்.


கோவை: பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்ட சாதாரண கூட்டம் ஒன்றிய குழு தலைவர் விஜயராணி தலைமையில் நடைபெற்றது.



இதில் கிராமப்புறங்களில் பல்வேறு பகுதிகளில் தார் சாலைகள் பழுதடைந்து காணப்படுவதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சாலைகளை செப்பணிட வேண்டும் என்று பெரும்பாலான ஒன்றிய குழு உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.

அப்போது ஆச்சிபட்டி ஒன்றிய குழு உறுப்பினர் மாலினி பேசிய போது, கடந்த சில தினங்களுக்கு முன்பு முதல்வர் கலந்து கொண்ட அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு கோவையில் நடைபெற்றது. ஆச்சிபட்டி ஊராட்சியில் வசிக்கும் 11 பயனாளிகளை தேர்வு செய்து மாவட்ட நிர்வாகம் பெயர் பட்டியல் அனுப்பியது.

ஆனால் அந்த பட்டியலில் தங்கள் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் கூட இல்லை என புகார் தெரிவித்தார். இது குறித்து மாலினி கூறும் போது தமிழக முதல்வர் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில் மாவட்ட நிர்வாகம் தரப்பில் வீட்டு மனை பட்டா உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களுக்கு பயனாளிகள் தேர்வு செய்து அனுப்பப்பட்ட பட்டியலில் தங்கள் பகுதியைச் சேர்ந்த ஒருவர் கூட இல்லை. வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்களின் பெயர் பட்டியல் இடம் பெற்றிருந்தது.



மாவட்ட நிர்வாகம் அனுப்பிய தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பேசிய போது நலத்திட்ட உதவிகளை பற்றி அவர்களுக்கு எதுவும் தெரியவில்லை என தெரிவித்தார்கள். இது வேதனையாக உள்ளது. முதல்வர் வழங்கும் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கான பயனாளிகளை அதிகாரிகள் முறையாக தேர்வு செய்கிறார்களா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.



வரும் காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...