முதல்வர் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில் குளறுபடி - பொள்ளாச்சி ஒன்றிய கூட்டத்தில் புகார்

கிராமப்புறங்களில் பல்வேறு பகுதிகளில் தார் சாலைகள் பழுதடைந்து காணப்படுவதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சாலைகளை செப்பணிட வேண்டும் என்று பெரும்பாலான ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் கோரிக்கை விடுத்தனர்.


கோவை: பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்ட சாதாரண கூட்டம் ஒன்றிய குழு தலைவர் விஜயராணி தலைமையில் நடைபெற்றது.



இதில் கிராமப்புறங்களில் பல்வேறு பகுதிகளில் தார் சாலைகள் பழுதடைந்து காணப்படுவதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சாலைகளை செப்பணிட வேண்டும் என்று பெரும்பாலான ஒன்றிய குழு உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.

அப்போது ஆச்சிபட்டி ஒன்றிய குழு உறுப்பினர் மாலினி பேசிய போது, கடந்த சில தினங்களுக்கு முன்பு முதல்வர் கலந்து கொண்ட அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு கோவையில் நடைபெற்றது. ஆச்சிபட்டி ஊராட்சியில் வசிக்கும் 11 பயனாளிகளை தேர்வு செய்து மாவட்ட நிர்வாகம் பெயர் பட்டியல் அனுப்பியது.

ஆனால் அந்த பட்டியலில் தங்கள் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் கூட இல்லை என புகார் தெரிவித்தார். இது குறித்து மாலினி கூறும் போது தமிழக முதல்வர் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில் மாவட்ட நிர்வாகம் தரப்பில் வீட்டு மனை பட்டா உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களுக்கு பயனாளிகள் தேர்வு செய்து அனுப்பப்பட்ட பட்டியலில் தங்கள் பகுதியைச் சேர்ந்த ஒருவர் கூட இல்லை. வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்களின் பெயர் பட்டியல் இடம் பெற்றிருந்தது.



மாவட்ட நிர்வாகம் அனுப்பிய தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பேசிய போது நலத்திட்ட உதவிகளை பற்றி அவர்களுக்கு எதுவும் தெரியவில்லை என தெரிவித்தார்கள். இது வேதனையாக உள்ளது. முதல்வர் வழங்கும் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கான பயனாளிகளை அதிகாரிகள் முறையாக தேர்வு செய்கிறார்களா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.



வரும் காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...