சீத்தக்காடு அமராவதி ஆற்றில் முதலை நடமாட்டம் - பொதுமக்கள், விவசாயிகள் அச்சம்

தடுப்பணை நடுவே உள்ள பாறை மீது 8 அடி நீளமுள்ள முதலை ஒன்று படுத்து கொண்டிருந்தது. இதனைப் பார்த்த ஆற்றில் குளிக்க வந்த பொதுமக்களும், விவசாய பணிகளுக்காக செல்ல வந்த விவசாயிகளும் ஆற்றைக் கடந்து செல்ல அச்சமடைந்து கரையிலேயே காத்திருந்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இருந்து அலங்கியம் வழியாக பழனி செல்லும் சாலையில் உள்ளது சீத்தக்காடு. இங்குள்ள அமராவதி ஆற்றின் கரையோர பகுதியில் பழமையான சங்கிலி கருப்பன் சுவாமி கோயில் அமைந்துள்ளதால் பக்தர்கள் வருவார்கள்.

ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட கற்களால் ஆன பழமையான தடுப்பணை உள்ளதால் விவசாயிகளும், தொழிலாளர்களும் அதன் கரையில் நடந்து அக்கரைக்கு சென்று விவசாயபணிகளை கவனிப்பது வழக்கம்.



இந்நிலையில் அமராவதி அணையில் இருந்து தப்பிவந்த 4-முதலைகள் இப்பகுதியில் நடமாடி வருகின்றன. கடந்த 7-வருடங்களுக்கு முன் 2 முதலைகளை வனத்துறையினர் பிடித்தனர். 2-முதலைகள் பிடிபடாமல் இருந்தது.



இந்நிலையில் தடுப்பணை நடுவே உள்ள பாறை மீது 8-அடி நீள முதலை படுத்து கொண்டிருந்தது. இதனைப் பார்த்த ஆற்றில் குளிக்க வந்த பொதுமக்களும், விவசாய பணிகளுக்காக செல்லும் விவசாயிகளும் ஆற்றைக் கடந்து செல்ல அச்சமடைந்து கரையிலேயே காத்திருந்தனர்.

அவர்களின் சத்தத்தை கேட்டு பாறையில் படுத்து இருந்த முதலை மீண்டும் தண்ணீருக்குள் மறைந்தது. முதலையை பிடிக்க வனத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்களும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...