தாராபுரம் அருகே உள்ள உப்பாறு அணைக்கு தண்ணீர் வழங்கக்கோரி 400-க்கும் மேற்பட்ட விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

உப்பாறு அணைக்கு தண்ணீர் வழங்கக்கோரி உப்பாறு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் அர்ஜுனன் தலைமையில் 400-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உப்பாறு அணை செயற்பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நடு இரவில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: தாராபுரம் அருகே உள்ள உப்பாறு அணைக்கு தண்ணீர் வழங்கக்கோரி 400-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உப்பாறு அணை செயற்பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு இரவில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் மற்றும் வருவாய் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து கலைந்து சென்றனர்.



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள உப்பாறு அணைக்கு தண்ணீர் வழங்கக்கோரி உப்பாறு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் அர்ஜுனன் தலைமையில் 400-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உப்பாறு அணை செயற்பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நடு இரவில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இது குறித்து உப்பாறு விவசாயிகள் சங்க உறுப்பினர் சிவகுமார் கூறியதாவது:- திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்துள்ள உப்பாறு அணைக்கு பி.ஏ.பி தண்ணீரை திறந்துவிட வலியுறுத்தி உப்பாறு பாசன விவசாயிகள் பல்வேறு போராட்டங்கள் மற்றும் 10-கட்ட பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால் திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிருஸ்துராஜ் விவசாயிகளின் கோரிக்கையான ஏற்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம், திருமூர்த்தி அணையிலிருந்து 1994 உத்தரவின்படி உப்பாறு அணைக்கு தண்ணீர் வழங்க வேண்டும். உப்பாறு அன்னைக்கு தண்ணீர் வரும் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் பாசனத்துக்கான மின் துண்டிப்பு அமல்படுத்த வேண்டும். வேளாண்மை இல்லாத மாற்று பயன்பாட்டிற்கு உள்ள நிலங்களை கண்டறிந்து அதற்கு தகுந்தபடி நீர் வினியோகம் செய்ய வலியுறுத்த வேண்டும், சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இரண்டு ஆண்டு காலம் ஆகியும் செயல்படுத்தாத திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும், மேலும் திருமூர்த்தி அணையில் இருந்து உப்பாறு அணைக்கு 24 அடி முழு கொள்ளளவு நீர் ஆன அரை டி.எம்.சி தண்ணீரை வழங்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார்.

மேலும் இது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் வந்து உத்தரவாதம் அளிக்க வேண்டும், அப்படி இல்லாத பட்சத்தில் தொடர்ந்து பகுதியில் போராட்டம் நடைபெறும் என இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் விவசாயிகள் தெரிவிக்கையில் ஆடு மாடு கோழிகளுக்கு தண்ணீர் இன்றியும், மேலும் மனிதர்களுக்கு குடிப்பதற்கு கூட தண்ணீர் இன்றி விவசாயம் செய்ய முடியாமலும் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். எங்களுக்கு உயிர் வாழ்வதற்கு உயிர் தண்ணீராவது அதிகாரிகள் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

மேலும் போராட்டத்தின் போது விவசாயிகள் தரையில் அமர்ந்தும் படுத்து கொண்டும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். இதனால் அணைப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...