வ.உ.சி பூங்காவில் உள்ள பாம்புகள் சிறுவாணி வனப்பகுதியில் விடப்படும் என வனத்துறை அதிகாரி தகவல்

பூங்காவில் உள்ள 10 நாகப்பாம்பு, 3 கண்ணாடிவிரியன், 4 சாரைப்பாம்பு ஆகியவை பெட்டிக்குள் அடைத்து வனத்துறை வாகனம் மூலம் கால்நடை மருத்துவர் சுகுமார் மற்றும் வனத்துறை அதிகாரிகள் உதவியுடன் சிறுவாணி வனப்பகுதியில் கொண்டு சென்று அங்கு விடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


கோவை: மத்திய வன பாதுகாப்பு ஆணையம் போதிய இடவசதி இல்லை என கோவை வ.உ.சி பூங்காவுக்கு உரிமம் ரத்து செய்தது. இதனை அடுத்து கடந்த மாதம் கோவை வ.உ.சி உயிரியல் பூங்காவில் இருந்து பெலிக்கான் மர நாய், குரங்கு, பாம்பு, முதலை உள்ளிட்ட உயிரினங்கள் வண்டலூர் மற்றும் வேலூர் உயிரியல் பூங்காவிற்கு கொண்டு செல்லப்பட்டது.



தற்போது கோவையில் உள்ள வ.உ.சி பூங்காவில் உள்ள 10 நாகப்பாம்பு, 3 கண்ணாடிவிரியன், 4 சாரைப்பாம்பு ஆகியவை பெட்டிக்குள் அடைத்து வனத்துறை வாகனம் மூலம் கால்நடை மருத்துவர் சுகுமார் மற்றும் வனத்துறை அதிகாரிகள் உதவியுடன் அந்த பாம்புகள் சிறுவாணி வனப்பகுதியில் கொண்டு சென்று அங்கு விடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



குறிப்பாக பாம்பை அவர்கள் பெட்டிக்குள் அடைக்கும்போது அந்தப் பாம்புகள் மிகவும் கோபத்துடன் சீறியது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...