துலுக்கனூர் பகுதியில் சாலை போட்டதில் ஒப்பந்ததாரர் முறைகேடு - மக்கள் சாலை மறியல்

மண் சாலையை கான்கிரீட் சாலையாக மாற்றி தர வேண்டும் என துலுக்கனூர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சாலை கேட்டு கொளத்துப்பாளையம் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து சாலையில் நின்று தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ள கொளத்துப்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட துலுக்கனூர் 13-வது வார்டில் சிமெண்ட் சாலை அமைத்ததில் விநாயகர் கோவிலுக்கு மேற்குபுறம் உள்ள நடு வீதிக்கு 40-மீட்டர் அளவு போடாமல் விட்டு, துலுக்கனூரில் உள்ள கோவில் பகுதிக்கு வரவேண்டிய சாலையை கிழபுறம் உள்ள தனி நபர் பட்டா இடத்திற்கு 4.0 மீட்டர் சாலை போட்டு தனியார் நில உரிமையாளரிடம் பணம் பெற்று ஒப்பந்ததாரர்கள் முறைகேடாக பஞ்சாயத்து பணத்தை செலவு செய்து சாலை அமைத்துள்ளனர்.



இது குறித்து அப்பகுதியில் வசிக்கும் 100-குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்திடம் கேட்டபோது பண்டில் பணமில்லை என்று கூறியதாக கூறப்படுகிறது.



விநாயகர் கோவிலுக்கு மேற்குபுறம் உள்ள நடு வீதியிலிருந்து உள்ள 40 மீட்டர் கோவிலுக்கு பொதுமக்கள் சாமி கும்பிட்டுச் செல்லும் சாலை பிரதான சாலையாக உள்ளது.



எனவே துலுக்கனூர் நடு வீதியிலிருந்து கோவிலுக்கு கிழக்கே செல்லும் மெயின் பாதையில் 40 மீட்டர் தூரம் சிமெண்ட் சாலை அமைத்து கோவிலுக்கு பொதுமக்கள் சென்று வழிபாடு செய்யவும், பொதுமக்கள் அவசர தேவைக்கும் தினசரி தேவைக்கும் பயன்பட்டு வரும் மண் சாலையை கான்கிரீட் சாலையாக மாற்றி தர வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சாலை கேட்டு கொளத்துப்பாளையம் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து சாலையில் நின்று தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். இதனால் துலுக்கனூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...