வேலம்பட்டி பகுதியில் டோல் கேட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்பினர் முற்றுகை

கட்டண சாலை என்பதற்கான எந்தவித கட்டுமானங்களும் செய்யப்படாமல், ஏற்கனவே இருந்த சாலை மீது எந்த மாற்றமும் செய்யாமல், அப்படியே சாலை அமைத்து நான்கு வழிச்சாலை என்கிற தோற்றத்தை மட்டுமே உருவாக்கி உள்ளனர் என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூரை அடுத்த அவிநாசிபாளையம் அருகே உள்ள வேலம்பட்டி பகுதியில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள், பொதுமக்கள், கிராம மக்கள் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி முதல் அவிநாசிபாளையம் வரை வரையிலான நான்கு வழிச்சாலை, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் அமைக்கப்பட்டு தற்போது வேலம்பட்டி அருகே சுங்கச்சாவடியை திறந்து சுங்கக் கட்டணம் வசூல் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

மொத்த நீளமான 32 கிலோ மீட்டரில் 20 கிலோ மீட்டர் தூரம் திருப்பூர் மாநகராட்சி எல்லைக்குள் இந்த சாலை செல்கிறது. கட்டண சாலை என்பதற்கான எந்தவித கட்டுமானங்களும் செய்யப்படாமல் ஏற்கனவே இருந்த சாலை மீது எந்த மாற்றமும் செய்யாமல், அப்படியே சாலை அமைத்து நான்கு வழிச்சாலை என்கிற தோற்றத்தை மட்டுமே உருவாக்கி உள்ளனர்.



மேலும், நெடுஞ்சாலைத்துறையினர் நீர்நிலை ஆக்கிரமிப்பை செய்து சுங்கச்சாவடி அமைத்துள்ளனர். திட்டமிட்டு சுங்கச்சாவடியை அமைத்து வசூலிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதை கண்டித்தும், அவினாசிபாளையத்தில் உள்ள வேலம்பட்டி டோல்கேட் வேண்டாம் என வலியுறுத்தியும், சுங்கச்சாவடி எதிர்ப்பு இயக்கம், வடக்கு அவிநாசி பாளையம் கிராம மக்கள், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினர், அரசியல் கட்சியினர் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இந்த முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு வேலம்பட்டி பகுதியில் டோல் கேட் வேண்டாம் என கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



அந்த பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டனர். இதனால் வேலம்பட்டி டோல்கேட் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...