தனிநபரின் அராஜங்கத்தை கண்டித்து பல்லடம் அருகே அருள்புரத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் தர்ணா போராட்டம்

சிவகணேஷ் என்பவர் தனது இரண்டு ஆட்டோக்களை தண்ணீர் பந்தல் பேருந்து நிலையத்தில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்வதாக ஆட்டோ ஓட்டுநர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அருள்புரத்தில் தண்ணீர் பந்தல் பேருந்து நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் கடந்த 24 ஆண்டுகளாக திருப்பூர் மாவட்ட ஆட்டோ ஓட்டுநர் பொது நல சங்கம் என்ற பெயரில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் ஆட்டோக்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்கின்றனர்.

இங்கு சுமார் 20 ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ள நிலையில், அதே பகுதியில் சிவகணேஷ் என்பவர் தனது இரண்டு ஆட்டோக்களை தண்ணீர் பந்தல் பேருந்து நிலையத்தில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்வதாகவும், இதனால் 20 ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், சங்கத்தின் சார்பில் பல்லடம் காவல் நிலையத்திலும், ஆட்டோ ஓட்டுநர்கள் புகார் அளித்திருந்தனர்.



ஆட்டோ ஓட்டுநர்களின் கோரிக்கைகளை ஏற்காமல் சிவ கணேஷ் என்பவர் தொடர்ச்சியாக வாகனத்தை நிறுத்துவதை கண்டித்து, இன்று தண்ணீர் பந்தல் பேருந்து நிறுத்தத்தில் இருபதுக்கும் மேற்பட்ட ஆட்டோக்களை நிறுத்தி ஆட்டோ ஓட்டுநர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.



மேலும், சிவ கணேஷ் என்ற தனிநபரின் அராஜகப் போக்கால் 20 குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், அவரது வாகனத்தை அப்புறப்படுத்தினால் மட்டுமே தர்ணா போராட்டத்தை கைவிட போவதாக தெரிவித்து ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...