வால்பாறையில் போக்குவரத்து பணிமனை முன்பு அண்ணா திமுக மற்றும் தொழிற்சங்கங்கள் சார்பாக ஆர்ப்பாட்டம்

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பணி கொடை, வாரிசு வேலை, ஓய்வு பெற்றவர்களுக்கு பணி பலன் கொடை, பேருந்துகளை பராமரித்து தருதல், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்களை நிறைவேற்ற வேண்டும் என்று தொழிற்சங்கத்தினர் கேட்டுக்கொண்டனர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் போக்குவரத்து பணிமனை முன்பு அண்ணா திமுக மற்றும் தொழிற்சங்கங்கள் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



ஆர்ப்பாட்டத்தில் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி, வால்பாறை நகர செயலாளர் மயில் கணேசன், தோட்ட தொழிலாளர் மாநில தலைவர் v.அமீது, மற்றும் போக்குவரத்து தொழிற்சங்க உறுப்பினர்கள் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பணி கொடை, வாரிசு வேலை, ஓய்வு பெற்றவர்களுக்கு பணி பலன் கொடை, போக்குவரத்து துறையில் பணி நியமனம், பேருந்துகளை பராமரித்து தருதல், புதிய பென்ஷன் திட்டம், ஊதிய உயர்வு,போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த கோரிக்கைகளை அரசு செய்து தர வேண்டும் என்றும், செய்து தரவில்லை என்றால் வருகிற 9ம் தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...