வால்பாறையில் போக்குவரத்து பணிமனை முன்பு அண்ணா திமுக மற்றும் தொழிற்சங்கங்கள் சார்பாக ஆர்ப்பாட்டம்

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பணி கொடை, வாரிசு வேலை, ஓய்வு பெற்றவர்களுக்கு பணி பலன் கொடை, பேருந்துகளை பராமரித்து தருதல், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்களை நிறைவேற்ற வேண்டும் என்று தொழிற்சங்கத்தினர் கேட்டுக்கொண்டனர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் போக்குவரத்து பணிமனை முன்பு அண்ணா திமுக மற்றும் தொழிற்சங்கங்கள் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



ஆர்ப்பாட்டத்தில் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி, வால்பாறை நகர செயலாளர் மயில் கணேசன், தோட்ட தொழிலாளர் மாநில தலைவர் v.அமீது, மற்றும் போக்குவரத்து தொழிற்சங்க உறுப்பினர்கள் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பணி கொடை, வாரிசு வேலை, ஓய்வு பெற்றவர்களுக்கு பணி பலன் கொடை, போக்குவரத்து துறையில் பணி நியமனம், பேருந்துகளை பராமரித்து தருதல், புதிய பென்ஷன் திட்டம், ஊதிய உயர்வு,போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த கோரிக்கைகளை அரசு செய்து தர வேண்டும் என்றும், செய்து தரவில்லை என்றால் வருகிற 9ம் தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...