பொள்ளாச்சி-உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சென்டர் மீடியனை அப்புறப்படுத்த கோரி சாலை மறியல்

நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சென்டர் மீடியங்களை அமைத்து தடுப்புகளை ஏற்படுத்தினர். இதனால் கிராமப்புறங்களுக்கு செல்லும் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் ஆகியோர் 2 கிலோமீட்டர் சுற்றிவர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.


கோவை: பொள்ளாச்சி உடுமலை தேசிய நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் சின்னம்பாளையம், மாக்கினாம்பட்டி, சோலபாளையம் ஊஞ்சவாலாம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமப்புறங்களில் சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

தேசிய நெடுஞ்சாலை இருபுறமும் கிராமங்களுக்கு செல்வதற்கு வழித்தடங்கள் இருந்தது. இந்தநிலையில் திடீரென நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சென்டர் மீடியங்களை அமைத்து தடுப்புகளை ஏற்படுத்தினர். இதனால் கிராமப்புறங்களுக்கு செல்லும் பொதுமக்கள் வாகனங்கள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் 2 கிலோமீட்டர் சுற்றிவர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.



எனவே சென்டர் மீடியங்களை அப்புறப்படுத்த கோரி திடீரென உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் நான்கு கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள் தலைமையில் பொதுமக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நான்கு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வந்த வழித்தடத்தை திடீரென அதிகாரிகள் முன்னறிவிப்பு இல்லாமல் அடைத்ததால் பொதுமக்கள், தொழிலாளர்கள், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள், வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் தேசிய நெடுஞ்சாலையில் நடுவே அமைக்கப்பட்டுள்ள இரும்பு தடுப்பு வேலிகளால் அதிக அளவில் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகிறது. நான்கு கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள் அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஊராட்சி மன்ற தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.



பின்னர் அங்கு வந்த காவல்துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தி சென்டர் மீடியங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.



இந்த போராட்டம் காரணமாக ஒரு மணி நேரம் உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...