பெதம்பம்பட்டியில் ராமர் வேடம் அணிந்து குழந்தைகள் அயோத்தி ராமர் கோவில் பிரசாதம் வழங்கினர்

கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு பாகுபாடின்றி அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமென தற்பொழுது அனைவருக்கும் குழந்தைகளுக்கு ராமர் வேடம் அணிந்து அழைப்பிதழ் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டு வருகின்றது என்று இந்து அமைப்பு நிர்வாகி ஜெயபிரகாஷ் தெரிவித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள பெதம்பம்பட்டியில் அயோத்தி ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த சேஷத்ர டிரஸ்ட் வேண்டுகோளுக்கு இணங்க இந்து அமைப்புகள் சார்பில் நால்ரோடு, பொள்ளாச்சி சாலை, தாராபுரம் சாலை பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் அருகில் உள்ள குடியிருப்புகளில் குழந்தைகள் ராமர் வேடம் அணிந்து அயோத்தி ராமர் கோவில் பிரசாதம் மற்றும் அழைப்பிதழ் வழங்கினர்.



அப்போது இந்து அமைப்புகள் சார்பில் ஜெய் ஸ்ரீ ராம், ஜெய் ஸ்ரீ ராம் என்று கோசங்கள் இட்டவாறு சென்றனர். மேலும் இந்து அமைப்பு நிர்வாகி ஜெயபிரகாஷ் கூறும் பொழுது, பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு பின் தற்பொழுது பல வருடங்களுக்குப் பிறகு அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு வருகின்ற 22 ஆம் தேதி கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது.



இந்த நிலையில் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு பாகுபாடின்றி அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமென தற்பொழுது அனைவருக்கும் குழந்தைகளுக்கு ராமர் வேடம் அணிந்து அழைப்பிதழ் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டு வருகின்றது என்று தெரிவித்தார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...