பீளமேட்டில் கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நல சங்கத்தின் 28வது ஆண்டு விழா

சங்கத்தின் சார்பில் ஒரு ஆண்டிற்குள் 2 கோடி ரூபாய் செலவில் திருமண மண்டபம் கட்டி பொதுமக்கள், ஏழை மக்களுக்கு குறைந்த வாடகைக்கு விடப்படும். ஒப்பந்ததாரர்கள் பதிவு 3 ஆண்டிற்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


கோவை: கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நல சங்கத்தின் 28வது ஆண்டு விழா பீளமேடு கொடிசியா அரங்கத்தில் நடந்தது. இதில் சங்க தலைவர் உதயகுமார், செயலாளர் கேசிபி சந்திரபிரகாஷ், பொருளாளர் அம்மாசையப்பன், துணை தலைவர் ராஜகோபால், துணை செயலாளர் மைக்கேல் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் சினிமா நடிகர் சதீஷ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.

சங்கத்தின் சார்பில் ஒரு ஆண்டிற்குள் 2 கோடி ரூபாய் செலவில் திருமண மண்டபம் கட்டி பொதுமக்கள், ஏழை மக்களுக்கு குறைந்த வாடகைக்கு விடப்படும். ஒப்பந்ததாரர்கள் பதிவு ஒரு ஆண்டிற்கு ஒரு முறை புதுப்பித்து வழங்கப்படுகிறது. இந்தநிலையில் அதனை 3 ஆண்டிற்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும். பொதுப்பணித்துறையில் உள்ள நடைமுறையை கடைபிடிக்க வேண்டும் என கடந்த 2 ஆண்டாக கோரிக்கை விடப்பட்டது. இந்த ஆண்டு முதல் பதிவு பணியை 3 ஆண்டுக்கு ஒரு முறை மாநகராட்சியில் புதுப்பித்து பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் உள்ள பூங்காக்களில் மாநகராட்சி கமிஷனர் அனுமதி பெற்று சுமார் 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்படும்.

மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்காக இலவசமாக கண், பல் பரிசோதனை, சிகிச்சை முகாம் நடத்த அனுமதி பெறப்பட்டது. சுமார் 90 மாநகராட்சி பள்ளிகளில் இந்த ஆண்டு கண், பல் சிகிச்சை முகாம் நடத்தப்படும்.

சங்க உறுப்பினர்களுக்கு 10 லட்ச ரூபாய் மதிப்பிலான விபத்து காப்பீடு வழங்கப்பட்டது. இந்த ஆண்டு முதல் மருத்துவ காப்பீடு 25 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும். வரும் காலங்களில் அனைவருக்கும் டெண்டர் என்ற நடைமுறை பின்பற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதாவது அனைத்து ஒப்பந்ததாரர்களுக்கும் சமமான முறையில் வேலை கிடைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.

சங்க உறுப்பினர்கள் அனைத்து அரசு துறைகளிலும் மொத்தமாக 1500 கோடி ரூபாய் வரை பணிகள் நடத்தி வருகிறார்கள். வரும் 3 ஆண்டுகளில் 2500 கோடி ரூபாய்க்கு பணிகள் அதிகரிக்க தேவையான ஆலோசனைகள் மற்றும் உதவிகள் சங்கத்தின் சார்பில் செய்து தரப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் பாட்டு, நடனம், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நல சங்கத்தின் 28 ம் ஆண்டு விழாவில் சங்க தலைவர் உதயகுமார் பேசினார். அருகில் சங்க நிர்வாகிகள் உள்ளனர்.

Newsletter

Tragedy in Tiruppur: Conductor Sleeping in Front of Bus Run Over, Killed

A 23-year-old bus conductor was killed in a tragic accident in Tiruppur after a private bus driver allegedly failed to n...

திருப்பூரில் பரிதாபம்: பேருந்து முன்பாக படுத்திருந்ததை கவனிக்காத ஓட்டுனர் – நடத்துனர் பலி.

திருப்பூரில் பேருந்தின் முன்பாக படுத்து உறங்கியிருந்த இளம் நடத்துனர் சூர்யா (23) மீது, ஓட்டுனர் கவனிக்காமல் பேருந்தை இயக...

22 லட்சம் மாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்த ஒன்றிய அரசு - நீட் தேர்வு ரத்து கோரி பல்சமய நல்லுறவு இயக்கம் வலியுறுத்தல்

கோயம்புத்தூரில் பல்சமய நல்லுறவு இயக்கம் நீட் தேர்வில் நடக்கும் முறைகேடுகளை கண்டித்து, வட மாநிலங்களில் வினாத்தாள் கசிவு ம...

22 லட்சம் மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்த ஒன்றிய அரசு - முறைகேடுகளுடன் நடக்கும் NEET தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தல்

NEET தேர்வில் தொடர் முறைகேடுகள் நடந்து வருவதாக குற்றம்சாட்டி, பல்சமய நல்லுறவு இயக்கம் உடனடியாக தேர்வை ரத்து செய்ய வேண்டு...

AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வி.பி.கந்தவேல் கட்சியிலிருந்து ராஜினாமா

கோயம்புத்தூர் தெற்கு மாவட்ட AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் வி.பி.கந்தவேல், கட்சியின் தற்போதைய நிகழ்வுகளால் மன...

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...