பொங்கல் பண்டிகையின்போது சேவல் சண்டைக்கு அனுமதி அளிக்க வேண்டும் - பொள்ளாச்சி சார் ஆட்சியரிடம் மனு

சேவல் சண்டைக்கு அனுமதி வழங்க கோரி பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு சேவலுடன் வந்த விவசாயியை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி சேவலை பறிமுதல் செய்ய முயன்ற போது தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: பொங்கல் பண்டிகை யொட்டி சேவல் சண்டைக்கு அனுமதி வழங்க கோரி பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு சேவலுடன் வந்த விவசாயிகளை காவல்துறையினர் தடுத்த நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேவல் சண்டைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியும், தமிழகத்தில் சேவல் சண்டைக்கு தடை விதிக்கபட்டுள்ளது. எனவே தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி சேவல் சண்டைக்கு அனுமதி வழங்க கோரி இன்று பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு சேவலுடன் வந்த விவசாயியை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி சேவலை பறிமுதல் செய்ய முயன்ற போது தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து சேவல் இல்லாமல் சென்று விவசாயிகள் சென்று சேவல் சண்டைக்கு அனுமதி வழங்க மனு அளித்தனர். மனித உயிருக்கு உத்தரவாதம் இல்லாத ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கும் தமிழக அரசு, விவசாயிகள் ஒன்றுமையுடன் விளையாட கூடிய சேவல் சண்டைக்கு அனுமதி வழங்காதது கண்டிக்கதக்கது. மேலும் கள்ளு இறக்க அனுமதி வழங்க வேண்டும், தேங்காய்க்கு உரிய விலை வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...