வால்பாறையில் அனைத்து பேருந்துகளும் வழக்கம் போல் இயக்கம்

வால்பாறையில் உள்ள எஸ்டேட் பகுதிகளுக்கு செல்வதற்காக 38 பேருந்துகள், வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி, கோவை, பழனி, திருப்பூர், சேலம், மன்னார்காடு ஆகிய வெளியூர் செல்லக்கூடிய ஆறு பேருந்துகள் என மொத்தம் 44 பேருந்துகளும் வழக்கம்போல் இயக்கப்படுகின்றன.


கோவை: தமிழகத்தில் போக்குவரத்து துறையில் 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி ஒன்பதாம் தேதி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக போக்குவரத்து துறை ஓட்டுனர் தொழிற்சங்கங்கத்தினர் தெரிவித்த நிலையில் இன்று கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் அனைத்து பேருந்துகளும் வழக்கம்போல் இயக்கப்படுகின்றன.



வால்பாறையில் உள்ள எஸ்டேட் பகுதிகளுக்கு செல்வதற்காக 38 பேருந்துகள், வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி, கோவை, பழனி, திருப்பூர், சேலம், மன்னார்காடு ஆகிய வெளியூர் செல்லக்கூடிய ஆறு பேருந்துகள் என மொத்தம் 44 பேருந்துகளும் வழக்கம்போல் இயக்கப்படுகின்றன.

பொதுமக்கள் எந்த ஒரு பாதிப்பும் இன்றி காலையில் வெளியூர் செல்வதற்கும், மாணவர்கள் பள்ளி செல்வதற்கும் பேருந்துகள் செயல்பட்டு வருகின்றன. மேலும் போக்குவரத்து பணிமனை முன்பு அசம்பாவிதங்கள் நடக்காத வண்ணம் காவல்துறையினரும் தீயணைப்புத் துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...