வால்பாறையில் அனைத்து பேருந்துகளும் வழக்கம் போல் இயக்கம்

வால்பாறையில் உள்ள எஸ்டேட் பகுதிகளுக்கு செல்வதற்காக 38 பேருந்துகள், வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி, கோவை, பழனி, திருப்பூர், சேலம், மன்னார்காடு ஆகிய வெளியூர் செல்லக்கூடிய ஆறு பேருந்துகள் என மொத்தம் 44 பேருந்துகளும் வழக்கம்போல் இயக்கப்படுகின்றன.


கோவை: தமிழகத்தில் போக்குவரத்து துறையில் 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி ஒன்பதாம் தேதி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக போக்குவரத்து துறை ஓட்டுனர் தொழிற்சங்கங்கத்தினர் தெரிவித்த நிலையில் இன்று கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் அனைத்து பேருந்துகளும் வழக்கம்போல் இயக்கப்படுகின்றன.



வால்பாறையில் உள்ள எஸ்டேட் பகுதிகளுக்கு செல்வதற்காக 38 பேருந்துகள், வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி, கோவை, பழனி, திருப்பூர், சேலம், மன்னார்காடு ஆகிய வெளியூர் செல்லக்கூடிய ஆறு பேருந்துகள் என மொத்தம் 44 பேருந்துகளும் வழக்கம்போல் இயக்கப்படுகின்றன.

பொதுமக்கள் எந்த ஒரு பாதிப்பும் இன்றி காலையில் வெளியூர் செல்வதற்கும், மாணவர்கள் பள்ளி செல்வதற்கும் பேருந்துகள் செயல்பட்டு வருகின்றன. மேலும் போக்குவரத்து பணிமனை முன்பு அசம்பாவிதங்கள் நடக்காத வண்ணம் காவல்துறையினரும் தீயணைப்புத் துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...