துடியலூர் அருகே சமத்துவ பொங்கல் கொண்டாடிய ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள்

புதுப்பானையில் பொங்கல் வைத்தும், அம்மி அரைத்தும், கயிறு இழுத்தும், உரி அடித்தும், சிலம்பம் சுற்றியும், பறை இசைத்தும், கல்லூரி மாணவ, மாணவிகள் பொங்கல் விழாவை மகிழ்ச்சியாக கொண்டாடி மகிழ்ந்தனர்.


கோவை: கோவை மாவட்டம் துடியலூர் அருகே வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவ, மாணவிகள் ஆசிரியர்களுடன் இணைந்து சமத்துவ பொங்கலை கொண்டாடினர்.



கல்லூரி வளாகத்தில் வண்ணக்கோலமிட்டு, முளைப்பாரி வைத்து, புதுப்பானையில் பச்சரிசியிட்டு அது பொங்கி வரும்போது பொங்கலோ பொங்கல் என குலவையிட்டு பொங்கல் வைத்து இறைவனுக்கு படையலிட்டு வழிபட்டனர்.



மேலும் பசு மாட்டிற்கு கற்பூரம் காட்டி பழம் வழங்கினர்.



தொடர்ந்து பாரம்பரிய உடையில் வந்திருந்த மாணவ, மாணவிகள் பங்கேற்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.



இதில் மாணவிகள் அம்மி அரைத்தும், ஆசிரியைகள் மாணவிகள் பங்கேற்ற கயிறு இழுக்கும் போட்டிகள், உரியடித்தல், சிலம்பம், மெதுவாக சைக்கிள் ஒட்டுதல், பறை இசைத்தல் எனபல்வேறு போட்டிகள் நடத்தியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.



மேலும் சினிமா பாடல்களுக்கு மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் நடனமாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Newsletter

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...