தாராபுரத்தில் டிட்டோ ஜாக் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாட்டை முறைப்படுத்த வேண்டும், திமுக தேர்தல் வாக்குறுதியான சிபிஎஸ் ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தமிழ்நாடு தொடக்க கல்வி இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு டிட்டோ ஜாக் சார்பில் மாவட்ட கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிகுலாபுரம் தலைமை ஆசிரியர் குருசாமி தலைமை தாங்கினார்.



கருங்காலி வலசு தலைமை ஆசிரியர் ஆறுமுகம் மற்றும் பச்சாபாளையம் ஆசிரியர் பார்த்திபன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை ஒருங்கிணைத்தனர்.



ஆர்ப்பாட்டத்தின் போது தொடக்கக்கல்வித்துறையில் பணியாற்றக்கூடிய 90% ஆசிரியர்களின் பதவி உயர்வு வாய்ப்பை பறிக்கக்கூடிய மாநில முன்னுரிமை வலியுறுத்தியும், அரசாணை 243 உடனடியாக ரத்து செய்ய வேண்டும், 2023 அக்டோபர் 12ஆம் தேதி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், பள்ளி கல்வி இயக்குனர், தொடக்கக் கல்வி இயக்குனர் உடன் டிட்டோ ஜாக் நடத்திய பேச்சுவார்த்தையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட 12 கோரிக்கைகள் தொடர்பான ஆணையை உடனடியாக வெளியிட வேண்டும், இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாட்டை முறைப்படுத்த வேண்டும், திமுக தேர்தல் வாக்குறுதியான சிபிஎஸ் ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தியும் மற்றும் சரண்டர் விடுப்பு தொடர வேண்டும்,ஊக்க ஊதியத்தை மீண்டும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...