கோவை மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவில் அறங்காவலர்கள் முறைகேடு குற்றச்சாட்டில் பணியிடை நீக்கம்

கோவை மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவில் அறங்காவலர் கிருஷ்ணசாமி மற்றும் மற்றொருவர் முறைகேடு குற்றச்சாட்டில் இந்து அறநிலையத்துறையால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.


கோவை: கோவை மதுக்கரை மரப்பாலம் பகுதியில் உள்ள தர்மலிங்கேஷ்வரர் கோவில் அறங்காவலர் கிருஷ்ணசாமி மற்றும் திருமூர்த்தி ஆகிய இருவரையும் இந்து அறநிலையத்துறையினர் பணியிடை நீக்கம் செய்துள்ளனர். இந்த நடவடிக்கை முறைகேடுகள் நடைபெற்றதாக சி.கே.கண்ணன் என்பவர் கொடுத்த புகாரின் பின்னணியில் எடுக்கப்பட்டது.

விசாரணையில், உண்டியல் பணம் மற்றும் நன்கொடை வசூலில் முறையான கணக்கு இல்லாமை, அரசிடம் அனுமதி பெறாமல் கட்டுமான பணிகள் மேற்கொண்டல், கோவிலுக்கு நிதி இழப்பு ஏற்படுத்தியதும், கையாடல் மூலம் இருப்பதும் தெரியவந்துள்ளது. குறிப்பாக, மதுக்கரை நெடுஞ்சாலையில் உள்ள 28 ஏக்கர் நிலம் ரூ.125 கோடி மதிப்பிலானது கோவில் பெயரில் இல்லாமல் இருந்தது மற்றும் இந்த சொத்துகள் மூலம் வருமானம் ஈட்ட எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துள்ளார் என்பதும் விசாரணையில் வெளிப்பட்டுள்ளது. மேலும், திருமண மண்டபத்தை அன்னதான மண்டபம் என கணக்கு காட்டி, அதிலிருந்து வரும் வருவாயை கையாடல் செய்திருப்பதும் கண்டறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டுகள் காரணமாக அறங்காவலர் கிருஷ்ணசாமி மற்றும் திருமூர்த்தி ஆகிய இருவரையும் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்துள்ளார். இந்த நிலையில், கோவிலின் நிதி மற்றும் நிர்வாக செயல்பாடுகளில் காணப்பட்ட குறைபாடுகள் மேலும் ஆழமாக விசாரிக்கப்பட உள்ளது.

Newsletter

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...