கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் பொங்கல் விழா கொண்டாட்டம்

பொங்கல் விழாவில் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், பாரம்பரிய உடையான வேட்டி சட்டை அணிந்தபடி, மாட்டு வண்டி ஒட்டி வந்து பொங்கல் விழாவில் கலந்து கொண்டார். விழாவில் பானை உடைத்தல், வழுக்கு மரம் ஏறுதல், சாக்குபோட்டி போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.


கோவை: கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் பொங்கல் விழா கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் நேற்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.



மாநகர காவல் துறையில் பணியாற்றும் காவலர்களின் குடும்பத்தினர் ஒன்றாக கலந்து கொண்ட இந்த விழாவில் அனைவரும் கூட்டாக இணைந்து புதுப்பானையில் பொங்கல் வைத்தனர்.



இந்த பொங்கல் விழாவில் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், வேட்டி சட்டை அணிந்தபடி மாட்டு வண்டியை ஒட்டியபடி வந்து பொங்கல் விழாவில் கலந்து கொண்டார். பொங்கல் பொங்கி வரும் பொழுது குலவையிட்டு பொங்கலோ பொங்கல் என கூறி உற்சாகமாக கொண்டாடினர்.

இந்த பொங்கல் விழாவில் பானை உடைத்தல், வழுக்கு மரம் ஏறுதல், சாக்குபோட்டி, ஸ்லோ சைக்கிள் ரேஸ் உட்பட பல்வேறு போட்டிகளும், பாரம்பரிய கலைகளான ஓயிரோட்டம், மயிலாட்டம், கரகாட்டம் போன்ற நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது.



இங்கு நடத்தப்பட்ட ஸ்லோ சைக்கிள் ரேஸில் மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் வேட்டியை மடித்து கட்டியபடி கலந்து கொண்டு சைக்கிள் ஓட்டினார். பல்வேறு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுகளுடன் பொங்கல் விழா காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் களை கட்டியது.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...