கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் பொங்கல் விழா கொண்டாட்டம்

பொங்கல் விழாவில் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், பாரம்பரிய உடையான வேட்டி சட்டை அணிந்தபடி, மாட்டு வண்டி ஒட்டி வந்து பொங்கல் விழாவில் கலந்து கொண்டார். விழாவில் பானை உடைத்தல், வழுக்கு மரம் ஏறுதல், சாக்குபோட்டி போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.


கோவை: கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் பொங்கல் விழா கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் நேற்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.



மாநகர காவல் துறையில் பணியாற்றும் காவலர்களின் குடும்பத்தினர் ஒன்றாக கலந்து கொண்ட இந்த விழாவில் அனைவரும் கூட்டாக இணைந்து புதுப்பானையில் பொங்கல் வைத்தனர்.



இந்த பொங்கல் விழாவில் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், வேட்டி சட்டை அணிந்தபடி மாட்டு வண்டியை ஒட்டியபடி வந்து பொங்கல் விழாவில் கலந்து கொண்டார். பொங்கல் பொங்கி வரும் பொழுது குலவையிட்டு பொங்கலோ பொங்கல் என கூறி உற்சாகமாக கொண்டாடினர்.

இந்த பொங்கல் விழாவில் பானை உடைத்தல், வழுக்கு மரம் ஏறுதல், சாக்குபோட்டி, ஸ்லோ சைக்கிள் ரேஸ் உட்பட பல்வேறு போட்டிகளும், பாரம்பரிய கலைகளான ஓயிரோட்டம், மயிலாட்டம், கரகாட்டம் போன்ற நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது.



இங்கு நடத்தப்பட்ட ஸ்லோ சைக்கிள் ரேஸில் மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் வேட்டியை மடித்து கட்டியபடி கலந்து கொண்டு சைக்கிள் ஓட்டினார். பல்வேறு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுகளுடன் பொங்கல் விழா காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் களை கட்டியது.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...