காங்கேயம் காவல் நிலையத்தில் பொங்கல் விழா கொண்டாட்டம் - பாரம்பரிய உடையில் வந்த காவலர்கள்

தைப்‌ பொங்கலை முன்னிட்டு காவல் ஆய்வாளர் காமராஜ் மற்றும் மகளிர் காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி ஆகியோர் தலைமையில் காவல் நிலையத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பாரம்பரிய உடையில் வந்து பொங்கல் வைத்து போலிசார் மகிழ்ந்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம்-தாராபுரம் சாலையில் காங்கேயம் காவல் நிலையம் மற்றும் காங்கேயம் அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆகியவை இயங்கி வருகிறது. தைப்‌ பொங்கலை முன்னிட்டு காவல் ஆய்வாளர் காமராஜ் மற்றும் மகளிர் காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி ஆகியோர் தலைமையில் காவல் நிலையத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.



மேலும் பொங்கல் விழா கொண்டாடுவதற்கு ஆண் காவலர்கள் சட்டை வேஷ்டியிலும், பெண் காவலர்கள் சேலை அணிந்தும் வந்திருந்தனர். இதில் இரண்டு காவல் நிலைய வளாகங்களிலும் வண்ண கோலமிட்டு பாரம்பரிய முறைப்படி அடுப்புக் கூட்டி, கரும்புகள் வைத்து மண் பானையில் பொங்கல் வைத்து அனைத்து போலிசாரும் இணைந்து பொங்கல் விழாவை உற்சாகமாகவும், மிகச் சிறப்பாகவும் கொண்டாடினர்.

மேலும் உதவி காவல் ஆய்வாளர்கள் சந்திரன், கார்த்திக், கோமதி, மாலா, பாஸ்கர், சத்தியமூர்த்தி மற்றும் காங்கேயம் காவல் நிலைய போலிசார்களும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...