காங்கேயம் காவல் நிலையத்தில் பொங்கல் விழா கொண்டாட்டம் - பாரம்பரிய உடையில் வந்த காவலர்கள்

தைப்‌ பொங்கலை முன்னிட்டு காவல் ஆய்வாளர் காமராஜ் மற்றும் மகளிர் காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி ஆகியோர் தலைமையில் காவல் நிலையத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பாரம்பரிய உடையில் வந்து பொங்கல் வைத்து போலிசார் மகிழ்ந்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம்-தாராபுரம் சாலையில் காங்கேயம் காவல் நிலையம் மற்றும் காங்கேயம் அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆகியவை இயங்கி வருகிறது. தைப்‌ பொங்கலை முன்னிட்டு காவல் ஆய்வாளர் காமராஜ் மற்றும் மகளிர் காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி ஆகியோர் தலைமையில் காவல் நிலையத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.



மேலும் பொங்கல் விழா கொண்டாடுவதற்கு ஆண் காவலர்கள் சட்டை வேஷ்டியிலும், பெண் காவலர்கள் சேலை அணிந்தும் வந்திருந்தனர். இதில் இரண்டு காவல் நிலைய வளாகங்களிலும் வண்ண கோலமிட்டு பாரம்பரிய முறைப்படி அடுப்புக் கூட்டி, கரும்புகள் வைத்து மண் பானையில் பொங்கல் வைத்து அனைத்து போலிசாரும் இணைந்து பொங்கல் விழாவை உற்சாகமாகவும், மிகச் சிறப்பாகவும் கொண்டாடினர்.

மேலும் உதவி காவல் ஆய்வாளர்கள் சந்திரன், கார்த்திக், கோமதி, மாலா, பாஸ்கர், சத்தியமூர்த்தி மற்றும் காங்கேயம் காவல் நிலைய போலிசார்களும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...