உடுமலையில் மாட்டுப்பொங்கல் கொண்டாட்டம் - நாட்டு இன மாடுகளை வளர்க்க விவசாயிகள் கோரிக்கை

திருமூர்த்தி மலை, பொன்னாலம்மன் சோலை, தளி, ஜல்லிப்பட்டி உட்பட பல்வேறு பகுதிகளில் பாரம்பரிய முறையில் சூரிய பொங்கல், பூமாதேவி பொங்கல், மாட்டுப் பொங்கல் என மூன்று வகை பொங்கல் வைத்து கிராம மக்கள் மகிழ்ந்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள திருமூர்த்தி மலை, பொன்னாலம்மன் சோலை, தளி, ஜல்லிப்பட்டி உட்பட பல்வேறு பகுதிகளில் மாட்டுப் பொங்கல் பாரம்பரியமான முறையில் சூரிய பொங்கல், பூமாதேவி பொங்கல், மாட்டுப் பொங்கல் என மூன்று வகை பொங்கல் வைத்து வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.



இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது, வருடம் முழுவதும் கால்நடைகள் விவசாயிகளுக்காக உழைத்து வரும் நிலையில், மாட்டுப்பொங்கல் தினத்தன்று கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக முன்னோர்கள் கூறிய இந்த அறிவுரையின் படி மாடுகளைக் குளிப்பாட்டி கொம்புகளுக்கு வர்ணம் பூசி அலங்கரித்து மாட்டுக்கு பிடித்த உணவு வகைகள் வழங்கி மாட்டுப்பொங்கலை பாரம்பரியமான முறையில் கொண்டாடி வருகின்றோம்.



மேலும், தற்சமயம் பெரும்பாலும் அனைவரும் கலப்பின மாடுகளை வைத்துள்ள நிலையில் நாட்டு மாடுகள் வளர்க்க அனைத்து விவசாயிகளும் முன்வர வேண்டும். இதற்கு தமிழக அரசு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்தனர். இந்தநிகழ்வில் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் கிராம மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...