திரைக்கு வந்த அயலான் படம் - கோவையில் உள்ள கோவில்களில் நடிகர் சிவகார்த்திகேயன் தரிசனம்

அயலான் படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் கோவை உக்கடம் பகுதியில் உள்ள ராமர் கோவில் மற்றும் பேரூர் பகுதியில் உள்ள பட்டீஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.


கோவை: ஆர்.டி.ராஜா, கொட்டபாடி ஜே.ராஜேஷ் ஆகியோர் தயாரிப்பில், ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான அயலான் படத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரகுல் பிரீத் சிங் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.

ஜனவரி 12ஆம் தேதி வெளிவந்த அயாலான் திரைப்படம் தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் திரையிடப்பட்டு வருகிறது.



இதனிடையே படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் கோவை உக்கடம் பகுதியில் உள்ள ராமர் கோவில் மற்றும் பேரூர் பகுதியில் உள்ள பட்டீஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.



அங்கு வந்த பக்தர்களுடன் செல்பியும் எடுத்துக் கொண்டார். தொடர்ந்து அயலான் படத்தை இயக்கிய திருப்பூரைச் சார்ந்த ஆர்.ரவிக்குமார் இல்லத்திற்கு சென்றார். சாமி தரிசனம் போது நடிகர் சிவகார்த்திகேயன் ரசிகர் மன்ற கோவை மாவட்ட தலைவர் வினோத் உடனிருந்தார்.

Newsletter

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...