அமராவதி ஆற்றில் நீரில் மூழ்கி உயிரிழந்த மூன்று பேரின் குடும்பத்தினற்கு அமைச்சர் கயல்விழி ஆறுதல்

ஆன்மீக சுற்றுலாவுக்கு சென்று விட்டு மதுரை செல்லும் வழியில் தாராபுரம் புறவழிச்சாலை அமராவதி ஆற்றில் குளிக்கச் சென்று சின்னகருப்பு, பாக்கியராஜ், ஹரி ஆகிய மூன்று பேர் பாறை இடுக்குகளில் சிக்கி உயிரிழந்தனர்.


திருப்பூர்: அமராவதி ஆற்றில் நீரில் மூழ்கி உயிரிழந்த மூன்று பேர் குடும்பத்திற்கு ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆறுதல் தெரிவித்தார்.



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஈஷா யோகா மைய ஆன்மீக சுற்றுலாவுக்கு சென்று விட்டு மதுரை செல்லும் வழியில் தாராபுரம் புறவழிச்சாலை அமராவதி ஆற்றில் குளிக்கச் சென்று சின்னகருப்பு, பாக்கியராஜ், ஹரி ஆகிய மூன்று பேர் பாறை இடுக்குகளில் சிக்கி உயிர் இழந்தனர்.



உயிரிழந்த மூன்று பேர்களின் உடல்களை தாராபுரம் தீயணைப்புத் துறையினர் மீட்டெடுத்து ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த துயர சம்பவம் குறித்து தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.



இந்த நிலையில் உள்ளூரில் இருந்த (தாராபுரம்) ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி சம்பவத்தை கேள்விப்பட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு வந்து உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார் அப்பொழுது, உயிரிழந்த மூன்று பேரின் உறவினர்கள் அமைச்சரின் காலில் விழுந்து கதறி அழுதனர்.

இதனால் கண்கலங்கிய ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி மருத்துவர் அழைத்து பேசினார். அப்போது மூன்று பேர்களின் உடல்களையும் விரைவாக உடற்கூறு ஆய்வு செய்து தரும்படி மருத்துவர்களை வலியுறுத்தினார்.



இறந்த குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்ததுடன் அவர்களுக்கு வேண்டிய உதவியை செய்து கொடுத்தார். அமராவதி ஆற்றில் நீரில் மூழ்கி மூன்று பேர் உயிரிழப்பு சம்பவத்தால் தாராபுரம் அரசு மருத்துவமனை வளாகமே பெரும் சோகமாக காணப்பட்டது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...