கிழவன் காட்டூர் கிராமத்தில் பாமக சார்பில் மாட்டுப்பொங்கல் கொண்டாட்டம்

திருப்பூர் மேற்கு மாவட்ட பாமக சார்பில் மாட்டுப்பொங்கல் விழா, பாரம்பரியமான முறையில் மருத்துவர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோரின் அறிவுரைபடி வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டதாக மாவட்டச் செயலாளர் பழனிச்சாமி தெரிவித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள ஆண்டிய கவுண்டனூர் ஊராட்சி கிழவன் காட்டூர் கிராமத்தில் திருப்பூர் மேற்கு மாவட்ட பாமக சார்பில் மாட்டுப்பொங்கல் பாரம்பரியமான முறையில் மருத்துவர் ராமதாஸ், அன்புமணி அறிவுரை படி வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இதுகுறித்து, திருப்பூர் மேற்கு மாவட்ட செயலாளர் பழனிச்சாமி கூறுகையில், வருடம் முழுவதும் விவசாயத்துக்கு பெரிதும் உதவியாக உள்ள கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மாடுகளை அலங்கரித்தும் 18 வகை உணவுகள் படைத்து பாரம்பரியமான முறையில் மாட்டு பொங்கலை கொண்டாடி வருகிறோம்.



மேலும் விவசாயிகளுக்கு உற்ற துணையாக உள்ள ஒரே தலைவர் மருத்துவர் ராமதாஸ் தான். விவசாயிகளுக்கான தனி நிதிநிலை போடப்பட்டு விவசாயிகளின் நலனில் அக்கறையுள்ள தலைவராக உள்ளார் என தெரிவித்தார்.

இந்தவிழாவில், மாவட்ட செயலாளர் பழனிச்சாமி, மேற்கு மாவட்ட கொள்கை விளக்க அணி தலைவர் ராமலிங்கம், உடுமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவபாலு, ஊடக பேரவை மாவட்ட செயலாளர் கனகராஜ், பாமக நிர்வாகிகள் தண்டபாணி, குமார், ஹரிஹரன், கார்த்திக் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...