காங்கேயம் அதிமுக ஒன்றிய கழகம் சார்பில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

நெய்க்காரன் பாளையம், ஆலம்பாடி, சகாயபுரம், கலைஞர் நகர், நத்த காட்டு வலசு, வரப்பாளையம், சந்தியா நகர், காடையூர், சிவன்மலை, படியூர், நத்தக்காடையூர் ஆகிய பகுதிகளில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாநகர் மாவட்டம், காங்கேயம் ஒன்றிய அதிமுக கழகம் சார்பில் முன்னாள் முதல்வர், பாரத ரத்னா, புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 107 வது பிறந்தநாள் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.



காங்கேயம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், ஒன்றிய கழகச் செயலாளருமான என்.எஸ்.என் நடராஜ் தலைமையில் 10 மேற்பட்ட ஊராட்சி பகுதிகளில் எம்ஜிஆர் அவர்களின் 107 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கழக கொடிக்கம்பங்களில் கொடியேற்றி, எம்ஜிஆர் அவர்களின் திரு உருவப்படங்களுக்கு மலர் தூவி மாலை அணிவித்தும், பொங்கல் வைத்து இனிப்புகள் வழங்கப்பட்டும் கொண்டாடி வருகின்றனர்.

இதில் காங்கேயம் ஒன்றியத்திற்கு உட்பட்ட நெய்க்காரன் பாளையம், ஆலம்பாடி, சகாயபுரம், கலைஞர் நகர், நத்த காட்டு வலசு, வரப்பாளையம், சந்தியா நகர், காடையூர், சிவன்மலை, படியூர், நத்தக்காடையூர் ஆகிய பகுதிகள் ஆகும். முதலில் நெய்க்காரன்பாளையத்தில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவில் மாவட்ட கழக துணை செயலாளர் லட்சுமி சோமசுந்தரம், ஒன்றிய கழக துணை செயலாளர் திருச்செந்தில், காமாட்சிபுரம் மணி, லோகேஸ்வரன் உட்பட 150க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது.

மேலும் எம்ஜிஆரின் சிறப்புக்கள் குறித்தும் அவர் நடித்த படங்களின் பாடல்கள் வரிக்குறித்தும் சிறப்பாக எடுத்துக்கூறப்பட்டது. புரட்சி தலைவர் எம்ஜிஆர், புரட்சி தலைவி அம்மா அவர்கள் வழியில் 4 ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி செய்தவர் நமது முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் எனவும், தற்போது எதிர்க்கட்சித் தலைவராகவும் சிறப்பாக செயற்படுகின்றார் எனவும், மீண்டும் அதிமுக எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தலைமையில் எப்போது ஆட்சி அமையும், அதில் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் அரியணையில் ஏறுவார் என பொதுமக்கள் காத்திருக்கின்றனர் என காங்கேயம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்.எஸ்.என்.நடராஜ் தெரிவித்தார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி இந்திய அளவில் 7வது இடம் பெற்று சாதனை

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, EducationWorld தேசிய தரவரிசையில் இந்திய அளவில் 7வது இடத்தையு...

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...

சோமனூர் பேருந்து நிலையம் அருகே மின் கம்பத்தில் தீ விபத்து

கோவை சோமனூர் பேருந்து நிலையம் அருகே ஏப்ரல் 27 மதியம் மின் கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மதிய நேரத்தில் மக்கள்...

திருப்பூரில் கட்சித் தலைவர் மீது அவதூறு பரப்பியதாக புகார்

திருப்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் குற்றம் சாட்டி இந்தி...

GCT கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள EVM இயந்திரங்களை கலெக்டர் திடீர் ஆய்வு

கோவை மாவட்டம் 10 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய EVM இயந்திரங்கள் தடாகம் சாலை GCT கல்லூரியில் பாதுகாப்பாக...

கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை திமுக நிர்வாகிகள் ஆய்வு

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ண...